.

Pages

Monday, June 3, 2019

திருவாரூர் ~ காரைக்குடி ரயில் சேவை: அதிராம்பட்டினத்தில் 2-வது நாளாக பயணிகள் உற்சாக வரவேற்பு!

அதிராம்பட்டினம், ஜூன் 01
திருவாரூர் ~ பட்டுக்கோட்டை ~ காரைக்குடி இடையேயான பயணிகள் ரயிலுக்கு அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் பயணிகள் சார்பில், 2-வது நாளாக இன்று திங்கட்கிழமை உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருவாரூர் ~ பட்டுக்கோட்டை ~ காரைக்குடி இடையேயான பயணிகள் சிறப்பு ரயில் நேற்று முன்தினம் (ஜூன் 01) திருவாரூரிலிருந்து (வண்டி எண்: 06847) காலை 8.15 மணிக்குப் புறப்பட்டு திருத்துறைப்பூண்டி, தில்லைவிளாகம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, ஒட்டங்காடு, பேராவூரணி, ஆயங்குடி, அறந்தாங்கி, வாளரமாணிக்கம், பெரியகோட்டை, பெரியகோட்டை, புதுவயல், கண்டனூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று, காரைக்குடி ரயில் நிலையத்தை அடைந்தது.

இந்நிலையில், 2-வது நாளாக இன்று திங்கட்கிழமை காலை 8.15 மணிக்கு  திருவாரூரிலிருந்து புறப்பட்டு, மதியம் காரைக்குடி ரயில் நிலையத்தை  சென்றடையும். முன்னதாக அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் பயணிகள் சார்பில், 2-வது நாளாக இன்று திங்கட்கிழமை உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த பயணிகள் ரயில் சேவை கடந்த ஜூன் 1 ல் தொடங்கி, வரும் ஆகஸ்ட் 30ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து வாரத்தில் 6 நாட்கள் மட்டும் இயங்கும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.