தஞ்சாவூர் மாவட்டம், ஏரிகள், குளங்கள் மற்றும் கால்வாய்களில் வண்டல் மண், சவுடு மண், களிமண் ஆகியவற்றை விவசாய மற்றும் சொந்த பயன்பாட்டிற்கு இலவசமாக எடுத்துக் கொள்ள விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளதாவது:-
தஞ்சாவூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றம் ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஏரிகள், குளங்கள் மற்றும் கால்வாய்களிலிருந்து வண்டல் மண், சவுடு மண், களிமண் போன்ற சிறுவகை கனிமங்களை விவசாய பயன்பாட்டிற்காகவும், வீட்டு உபயோகம் மற்றும் மண்பாண்டம் செய்தல் போன்ற சொந்த பயன்பாட்டிற்காகவும் இலவசமாக எடுத்துக்கொள்ள கடந்தாண்டைப் போல இந்தாண்டும் அனுமதி வழங்கப்படுகிறது. அரசாணை மற்றும் சிறுகனிம சலுகை விதியின்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 1951 ஏரிகள், குளங்கள் மற்றும் கால்வாய்களில் வண்டல் மண், சவுடு மண், களிமண் ஆகியவற்றை இலவசமாக எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
தஞ்சாவூர் மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளபடி, தஞ்சாவூர் வட்டத்தில் 166 இடங்களிலும், திருவையாறு வட்டத்தில் 73 இடங்களிலும், ஒரத்தநாடு வட்டத்தில் 315 இடங்களிலும், பூதலூர் வட்டத்தில் 136 இடங்களிலும், கும்பகோணம் வட்டத்தில் 185 இடங்களிலும், பாபநாசம் வட்டத்தில் 169 இடங்களிலும், திருவிடைமருதூர் வட்டத்தில் 252 இடங்களிலும், பட்டுக்கோட்டை வட்டத்தில் 473 இடங்களிலும், பேராவூரணி வட்டத்தில் 182 இடங்களிலும் என தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 1951 ஏரிகள், குளங்கள் மற்றும் கால்வாய்களில் வண்டல் மண், சவுடு மண், களிமண் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் மண் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள ஏரிகள், குளங்கள் மற்றும் கால்வாய்களில் இதுவரை 4765572 கனமீட்டர் மண் எடுக்கப்பட்டு சுமார் 25321 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். வண்டல் மண், சவுடுமண் மற்றும் களிமண் எடுப்பற்கு விண்ணப்பதாரரின் இருப்பிடம் அல்லது விவசாய நிலமானது விண்ணப்பிக்கும் ஏரி, குளம், கால்வாய் அமைந்துள்ள வருவாய் கிராமத்திலோ அல்லது அதனை சுற்றியுள்ள வருவாய் கிராமத்திலோ அமைந்திருக்க வேண்டும். விவசாய பயன்பாட்டிற்கு ஒரு ஏக்கர் நன்செய் நிலத்திற்கு இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை 75 கனமீட்டருக்குள்ளும், ஒரு ஏக்கர் புன்செய் நிலத்திற்கு இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை 90 கனமீட்டருக்குள்ளும் இலவசமாக வண்டல் மண், சவுடு மண் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. சொந்த பயன்பாட்டிற்கு இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை 30 கன மீட்டருக்கள் மண் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. மண் எடுப்பதற்கு வழங்கப்படும் அனுமதிச் சீட்டு இருபது நாட்கள் செல்லத்தக்கதாகும்.
எனவே, விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் மண்பாண்டம் செய்பவர்கள் தங்களது விவசாய பயன்பாடு மற்றும் சொந்த பயன்பாட்டிற்கு ஏரிகள், குளங்கள் மற்றும் கால்வாய்களில் இலவசமாக வண்டல் மண், சவுடு மண் மற்றும் களி மண் எடுத்துக்கொள்ள தொடர்புடைய வட்டாட்சியர்களிடம் விண்ணப்பித்து அனுமதி பெறலாம்.
இவ்வாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளதாவது:-
தஞ்சாவூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றம் ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஏரிகள், குளங்கள் மற்றும் கால்வாய்களிலிருந்து வண்டல் மண், சவுடு மண், களிமண் போன்ற சிறுவகை கனிமங்களை விவசாய பயன்பாட்டிற்காகவும், வீட்டு உபயோகம் மற்றும் மண்பாண்டம் செய்தல் போன்ற சொந்த பயன்பாட்டிற்காகவும் இலவசமாக எடுத்துக்கொள்ள கடந்தாண்டைப் போல இந்தாண்டும் அனுமதி வழங்கப்படுகிறது. அரசாணை மற்றும் சிறுகனிம சலுகை விதியின்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 1951 ஏரிகள், குளங்கள் மற்றும் கால்வாய்களில் வண்டல் மண், சவுடு மண், களிமண் ஆகியவற்றை இலவசமாக எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
தஞ்சாவூர் மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளபடி, தஞ்சாவூர் வட்டத்தில் 166 இடங்களிலும், திருவையாறு வட்டத்தில் 73 இடங்களிலும், ஒரத்தநாடு வட்டத்தில் 315 இடங்களிலும், பூதலூர் வட்டத்தில் 136 இடங்களிலும், கும்பகோணம் வட்டத்தில் 185 இடங்களிலும், பாபநாசம் வட்டத்தில் 169 இடங்களிலும், திருவிடைமருதூர் வட்டத்தில் 252 இடங்களிலும், பட்டுக்கோட்டை வட்டத்தில் 473 இடங்களிலும், பேராவூரணி வட்டத்தில் 182 இடங்களிலும் என தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 1951 ஏரிகள், குளங்கள் மற்றும் கால்வாய்களில் வண்டல் மண், சவுடு மண், களிமண் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் மண் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள ஏரிகள், குளங்கள் மற்றும் கால்வாய்களில் இதுவரை 4765572 கனமீட்டர் மண் எடுக்கப்பட்டு சுமார் 25321 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். வண்டல் மண், சவுடுமண் மற்றும் களிமண் எடுப்பற்கு விண்ணப்பதாரரின் இருப்பிடம் அல்லது விவசாய நிலமானது விண்ணப்பிக்கும் ஏரி, குளம், கால்வாய் அமைந்துள்ள வருவாய் கிராமத்திலோ அல்லது அதனை சுற்றியுள்ள வருவாய் கிராமத்திலோ அமைந்திருக்க வேண்டும். விவசாய பயன்பாட்டிற்கு ஒரு ஏக்கர் நன்செய் நிலத்திற்கு இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை 75 கனமீட்டருக்குள்ளும், ஒரு ஏக்கர் புன்செய் நிலத்திற்கு இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை 90 கனமீட்டருக்குள்ளும் இலவசமாக வண்டல் மண், சவுடு மண் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. சொந்த பயன்பாட்டிற்கு இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை 30 கன மீட்டருக்கள் மண் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. மண் எடுப்பதற்கு வழங்கப்படும் அனுமதிச் சீட்டு இருபது நாட்கள் செல்லத்தக்கதாகும்.
எனவே, விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் மண்பாண்டம் செய்பவர்கள் தங்களது விவசாய பயன்பாடு மற்றும் சொந்த பயன்பாட்டிற்கு ஏரிகள், குளங்கள் மற்றும் கால்வாய்களில் இலவசமாக வண்டல் மண், சவுடு மண் மற்றும் களி மண் எடுத்துக்கொள்ள தொடர்புடைய வட்டாட்சியர்களிடம் விண்ணப்பித்து அனுமதி பெறலாம்.
இவ்வாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.