.

Pages

Tuesday, June 25, 2019

தீ விபத்தில் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு அதிரை பைத்துல்மால் சார்பில் நிவாரண உதவி (படங்கள்)

அதிரை பைத்துல்மால் செயலர் எஸ்.ஏ அப்துல் ஹமீது நிவாரண உதவி வழங்குகிறார்
அதிராம்பட்டினம், ஜூன் 25
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் நடுத்தெரு மேல்புறத்தை சேர்ந்தவர் அபூபக்கர். இவரது வீட்டின் அருகே சாகுல் ஹமீது மனைவி ரஹ்மத் (38), ரஹ்மான் மனைவி அபுரோஸ் பேகம் (25) ஆகியோர் அடுத்தடுத்து குடிசை வீடுகளில் குடியிருந்து வந்தனர்.

இந்நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை மதியம் திடீரென குடிசையின் மேற்கூரையில் தீ பற்றியது, பின்னர், தீ மளமளவென பரவியதால் வீட்டில் இருந்த அரிசி மூடை, பீரோல், எரிவாயு சிலிண்டர், இடியாப்பம் சுடும் தளவாடப் பொருட்கள் உட்பட அனைத்தும் தீயில் கருகியது.

இந்நிலையில், தீ விபத்தில் பாதிப்படைந்த ரஹ்மத், அபுரோஸ் பேகம் ஆகிய குடும்பங்களுக்கு அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் சார்பில், தலா ஆயிரம் வீதம் 2 ஆயிரம் ரொக்கம், தலா 10 கிலோ அரிசி, தலா புடவை-1, சட்டைத்துணி-1, தலா 2 பெட் சீட் ஆகிய நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.