அதிராம்பட்டினம், ஜூன் 20
அதிராம்பட்டினம் எம்.எஸ்.எம் நகர் மஸ்ஜீத் ரஹ்மான் நிர்வாகக் கமிட்டி சார்பில், பள்ளிவாசல் தண்ணீர் தேவைக்கு நிதியுதவி அளித்த கொடையாளிகளுக்கு நன்றி தெரிவிப்புக் கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பள்ளிவாசல் நிர்வாகக்கமிட்டித் துணைத் தலைவர் அசன் அலி தலைமை வகித்தார். பள்ளிவாசல் நிர்வாகி இ.வாப்பு மரைக்காயர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
கூட்டத்தில், பள்ளிவாசல் நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று தண்ணீர் தேவைக்காக நிதி ஏற்பாடு செய்துகொடுத்த அதிரை பைத்துல்மால் ரியாத் கிளைத் தலைவர் ஹாஜி ஏ. சரபுதீன் மற்றும் அவ்வமைப்பின் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், பள்ளிவாசல் அடிப்படை கட்டமைப்பு பணிகளுக்கு அவ்வப்போது உதவி வரும் கொடையாளிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட எம்.எஸ்.எம் அறக்கட்டளை செயலாளர் எம்.எஸ்.எம் முகமது யூசுப் பள்ளியின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவீனங்களுக்கு தமது அறக்கட்டளை மூலம் உதவதற்கு அனைத்து ஏற்பாடும் செய்து தருவதாக குறிப்பிட்டுப் பேசினார். மேலும், கூட்டத்தில் பள்ளிவாசல் இமாம் மற்றும் முஅத்தீன் ஆகியோரின் மாதச் சம்பளத்தை தேவைக்கேற்ப உயர்த்தி வழங்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.
இக்கூட்டத்தில், சமூக ஆர்வலர்கள் ஹாஜி முகமது புஹாரி, ஹாஜி எஸ்.ஏ அப்துல் ஹமீது, வழக்குரைஞர் ஹாஜி ஏ. முனாப், இன்ஜினியர் இல்முதீன், ஜாஃபர் அலி, சாதிக், அப்துல் மாலிக் மற்றும் எம்.எஸ்.எம் நகர் மஹல்லா நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கூட்ட முடிவில், பள்ளிவாசல் நிர்வாகி பிஸ்மில்லாகான் நன்றி கூறினார்.
அதிராம்பட்டினம் எம்.எஸ்.எம் நகர் மஸ்ஜீத் ரஹ்மான் நிர்வாகக் கமிட்டி சார்பில், பள்ளிவாசல் தண்ணீர் தேவைக்கு நிதியுதவி அளித்த கொடையாளிகளுக்கு நன்றி தெரிவிப்புக் கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பள்ளிவாசல் நிர்வாகக்கமிட்டித் துணைத் தலைவர் அசன் அலி தலைமை வகித்தார். பள்ளிவாசல் நிர்வாகி இ.வாப்பு மரைக்காயர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
கூட்டத்தில், பள்ளிவாசல் நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று தண்ணீர் தேவைக்காக நிதி ஏற்பாடு செய்துகொடுத்த அதிரை பைத்துல்மால் ரியாத் கிளைத் தலைவர் ஹாஜி ஏ. சரபுதீன் மற்றும் அவ்வமைப்பின் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், பள்ளிவாசல் அடிப்படை கட்டமைப்பு பணிகளுக்கு அவ்வப்போது உதவி வரும் கொடையாளிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட எம்.எஸ்.எம் அறக்கட்டளை செயலாளர் எம்.எஸ்.எம் முகமது யூசுப் பள்ளியின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவீனங்களுக்கு தமது அறக்கட்டளை மூலம் உதவதற்கு அனைத்து ஏற்பாடும் செய்து தருவதாக குறிப்பிட்டுப் பேசினார். மேலும், கூட்டத்தில் பள்ளிவாசல் இமாம் மற்றும் முஅத்தீன் ஆகியோரின் மாதச் சம்பளத்தை தேவைக்கேற்ப உயர்த்தி வழங்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.
இக்கூட்டத்தில், சமூக ஆர்வலர்கள் ஹாஜி முகமது புஹாரி, ஹாஜி எஸ்.ஏ அப்துல் ஹமீது, வழக்குரைஞர் ஹாஜி ஏ. முனாப், இன்ஜினியர் இல்முதீன், ஜாஃபர் அலி, சாதிக், அப்துல் மாலிக் மற்றும் எம்.எஸ்.எம் நகர் மஹல்லா நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கூட்ட முடிவில், பள்ளிவாசல் நிர்வாகி பிஸ்மில்லாகான் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.