தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் அஹ்லன் கலீபா. சமூக ஆர்வலரான இவருக்கு எதிர்வரும் (07-06-2019) வெள்ளிக்கிழமை இரவு அதிராம்பட்டினம் செக்கடிப்பள்ளிவாசல் வளாகத்தில் திருமணம் நடைபெற உள்ளது.
இந்நிலையில், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அதிகமான மரக்கன்றுகளை நட வேண்டும் என்பதை வலியுறுத்தி தனது நண்பர்கள், உறவினர்களுக்கு விதைப்பந்து அடங்கிய திருமண அழைப்பிதழை நேரில் சென்று வழங்கி வருகிறார். வழங்கப்பட்ட விதை எந்த மரத்தின் விதை என்ற தகவலையும், மரக்கன்றுகள் பராமரிப்பு முறை பற்றியும் கூறி வருகிறார். சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விதைப்பைகளை அஹ்லன் கலீபா வழங்கி வருவதற்கு பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும், திருமண நிகழ்ச்சியன்று வாழ்த்துவதற்கு வருகைதரும் நண்பர்களுக்கு மரக்கன்றுகள் வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
நல்ல பாராட்டுதலுக்குரியசெயல்.
ReplyDelete