.

Pages

Wednesday, June 5, 2019

அதிரையில் விதைப்பந்து வழங்கி திருமண அழைப்பு: மணமகனுக்கு பாராட்டு!

அதிராம்பட்டினம், ஜூன் 05
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் அஹ்லன் கலீபா. சமூக ஆர்வலரான இவருக்கு எதிர்வரும் (07-06-2019) வெள்ளிக்கிழமை இரவு அதிராம்பட்டினம் செக்கடிப்பள்ளிவாசல் வளாகத்தில் திருமணம் நடைபெற உள்ளது.

இந்நிலையில், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அதிகமான மரக்கன்றுகளை நட வேண்டும் என்பதை வலியுறுத்தி தனது நண்பர்கள், உறவினர்களுக்கு விதைப்பந்து அடங்கிய திருமண அழைப்பிதழை நேரில் சென்று வழங்கி வருகிறார். வழங்கப்பட்ட விதை எந்த மரத்தின் விதை என்ற தகவலையும், மரக்கன்றுகள் பராமரிப்பு முறை பற்றியும் கூறி வருகிறார். சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விதைப்பைகளை அஹ்லன் கலீபா வழங்கி வருவதற்கு பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும், திருமண நிகழ்ச்சியன்று வாழ்த்துவதற்கு வருகைதரும் நண்பர்களுக்கு மரக்கன்றுகள் வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
 
 
 
 
 
 

1 comment:

  1. நல்ல பாராட்டுதலுக்குரியசெயல்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.