.

Pages

Saturday, June 1, 2019

ரயில் போக்குவரத்து சேவை தொடங்க பாடுபட்டோர் நலனுக்கு சிறப்பு 'துஆ' (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூன் 01
திருவாரூர் ~ பட்டுக்கோட்டை ~ காரைக்குடி இடையேயான முதல் பயணிகள் ரயிலுக்கு அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் பயணிகள் சார்பில், இன்று சனிக்கிழமை உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதிராம்பட்டினம் அல் மதரஸத்துர் ரஹ்மானிய அரபிக்கல்லூரி பேராசிரியர் மவ்லவி ஏ. முஹம்மது நெய்னா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு,  ரயில் போக்குவரத்து சேவையை கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்ட ரயில் ஆர்வலர்கள், இப்பணிக்காக பாடுபட்ட ரயில்வே உயர் அதிகாரிகள், பொறியாளர்கள், கட்டுமானப் பணியாளர்கள் உட்பட ரயில் பயணிகள் அனைவரின் வாழ்வு சிறக்கவும், பயணிகளின் ரயில் பயணம் பாதுகாப்பாக அமையவும், சிறப்பு துஆ ஓதி பிரார்த்தனை செய்தார். 

இந்நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் நல்வாழ்வு பேரவை நிறுவனத் தலைவர் மு.க.செ அகமது அலி ஜாஃபர், அதிராம்பட்டினம் ரயில் பயணிகள் நலச் சங்கத் தலைவர் ஹாஜி எம்.எஸ் சிஹாப்தீன், செயலர் ஹாஜி ஏ அப்துல் ரெஜாக் மற்றும் பயணிகள் நலச் சங்க நிர்வாகிகள், ரயில் ஆர்வலர்கள், பயணிகள் உட்பட சுமார் 300 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.