.

Pages

Thursday, June 20, 2019

அய்டா சேவை அமைப்பின் மாதாந்திரக் கூட்டம் (படங்கள்)

அதிரை நியூஸ்: ஜூன் 20
அய்டாவின் ஜுன் மாததிற்கான மாதந்திரக் கூட்டம் வெள்ளிக்கிழமை  நடைபெற்றது. ஹாபிழ் நெய்னா முகமது இறை வசனம் ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

அதிரையின் கடந்த மாதங்களில் இறந்தவர்களின் விவரங்கள் பகிரப்பட்டு அவர்களின் மஃபிரத்துக்காக துஆ செய்யப்பட்டது.

கடந்த மாதங்களின் அய்டா அமைப்பிற்கு வந்த கோரிக்கைகளின் அடிப்படையில் வருமானமின்றி செயல்படும் உமர் பள்ளி மற்றும் மக்தூம் பள்ளி ரமலானின் தேவைக்களுக்காக உதவி  செய்யப்பட்டது.

ஏ.ஜெ பள்ளி மற்றும் அதிரை மகாதிப் இணைந்து நடத்தும் திருக்குர் ஆன் திறன் அறிதல் போட்டிக்கு அய்டா சார்பாக  வழங்கப்பட்டுள்ளதை அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளாராக அதிரை பைத்துல்மால் தலைவர் பேராசிரியர் எஸ்.பரகத் கலந்து கொண்டு சிறப்பித்து,அதிரை பைத்துல்மாலின் தொடங்கிய நிலையில் இருந்து முதல் இன்றைய நிலையை அனைவரின் முன்னிலையில் எடுத்துரைத்தார்கள்.

இதில் குறிப்பாக:
- ரமலானில் ஃபித்ரா வினியோகம்
- குர்பானி திட்டம்
- வட்டி இல்லா நகை கடன் தொகை உயர்வு
- மறைமுக நேரடி உதவிகள்
- வருமான இல்லாதவர்களுக்கான பெண்சன் திட்டம்
- சென்னையில் இருந்த பைத்துல்மாலின் கட்டிட விற்ற விபரம்
- அதேபோல் அதிரையில் இருக்கும் பைத்துல்மாலின் கட்டிட வாடகை
விவரங்கள்
- வெளிநாடு வாழ் அதிரையர்கள் அதிரை பைத்துல்மாலிற்கு ஆற்றிவரும்
 உதவிகள்
- கஜா புயலின் பைத்துல்மாலின் தலைமை பங்களிப்பு
- எதிர்கால அதிரை பைத்துல்மால் பற்றி அதிரை பைத்துல்மால் தலைவர்  பேசினார்கள்.

கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் பைத்துல்மால் சேவை அமைப்பின் செயல்பாடுகள் பற்றி எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது.  மேலும்,  அதிரை பைத்துல்மால் சார்பாக சில கோரிக்கைகள் விடுத்தார்கள்.

1.வருங்கால அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பினர் கொண்டு செல்வதற்கு நமதூர் இளைஞர்கள் முன்வர வேண்டும்.

2.வெளிநாடுகளின் வாழ்க்கையை முடித்து கொண்டு தாயகத்திற்கு வரும் நமதூர் வாசிகளின் பங்கு குறைவாக உள்ளது என்றும், கூட்டு குர்பானி திட்டங்களில் வெளிநாடு வாழ் அதிரையர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் பங்கெடுக்குமாறும் கேட்டுகொண்டார்கள்.

3. இன்றைய காலகட்டதில் ஒன்றினைந்து செயல்படவேண்டி இருப்பதால் அனைவரும் ஒற்றுமையுடன் பயணித்து ஊரின் ஒற்றுமைக்கு பாடுபட வேண்டினார்.

அய்டாவின் சார்பாக நேரடி கோரிக்கைகள்: 
1. அதிரை பைத்துல்மால் நிர்வாகத்தினர் அதிரையில் இருக்கும் அனைத்து தெரு மஹல்லா நிர்வாகிகளுடம் தொடர்பினை ஏற்படுத்தி ஒன்றினைந்து செயல்பட கேட்டுக்கொள்ளப்பட்டது.

2. பென்ஷன் தொகையை வரும் காலங்களில் மேலும் விரிவுபடுத்தாமல் தற்போதுள்ள பயனாளிகளுக்கு ரூ. 600 என்றிருப்பதை ரூ.1000 மாக உயர்த்தி வழங்க ஆவண செய்யுமாறு AYDAவின் சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டது.

3. அடுத்த வருடத்திலிருந்து அய்டா அமைப்பின் சார்பில் ஜக்காத் வசூல் செய்து அதிரை பைத்துல்மாலுக்கு அனுப்பித்தருவதாக முடிவு செய்யப்பட்டது.

புரவலர் சந்தா திட்டம் : 
அதிரை பைத்துல்மாலிற்கான‌ புரவலர் சந்தா நிதி 1000 ரூபாய் ஆண்டுக்கு என்ற திட்டத்தினை அய்டாவின் சார்பாக கொண்டுவரப்பட்டுள்ளது.  புரவலர் திட்டத்தை மற்ற பைத்துல்மாலின் கிழைகளுக்கும் அறிமுகப்படுத்தி வருடாவருடம் பைத்துல்மாலின் நிதியை அதிகப்ப‌டுத்துவது என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

அயல்நாட்டிலும், விளையாட்டு போட்டிகளை ஊக்குவிக்கும்வண்ணம் Tamil nadu Friends Football என்ற அமைப்பினை ஜித்தா வாழ் அதிரை சகோதரர்கள் உருவாக்கி முதல் கால்பந்து போட்டியை வெற்றிகரமாக நடத்தியதற்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.