பட்டுக்கோட்டை, ஜூன்.20-
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் புதன்கிழமை அன்று நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பூங்கோதை தலைமை வகித்தார். மாற்றுத் திறனாளிகள் நல மாவட்ட அலுவலர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான நலச் சங்க மாவட்டத் தலைவர் பஹாத் அகமது, மாவட்ட துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் சந்தித்து வரும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் குறைகள் குறித்து அதிகாரிகள் கேட்டறிந்தனர்.
மாற்றுத்திறனாளிகள் சார்பில், உதவித்தொகை கோரி கொடுக்கப்பட்ட மனுக்களில், ஏற்கப்பட்ட மனுக்களின் முன்னுரிமைப் பட்டியல் குறித்து சங்க நிர்வாகிகள் விபரம் கேட்டறிந்தனர். மாற்றுத் திறனாளிகள் கோரிக்கையை ஏற்று, பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் உள்ள இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில், மாற்றுத்திறனாளிகள் வாகனங்கள் நிறுத்த தனியாக இடம் ஒதுக்கப்படும். இதனைச் செய்ய ஒப்பந்ததாரர் தவறும் பட்சத்தில், அவரது உரிமம் ரத்து செய்யப்படும் எனவும், அரசு மற்றும் தனியார் கட்டடங்களில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில், கைப்பிடி வசதியுடன், சாய்தள அமைப்பு ஏற்படுத்த அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில், வட்டாட்சியர்கள், நகராட்சி ஆணையர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள், பட்டுக்கோட்டை ஒன்றியத் தலைவர் குமரேசன், சேதுபாவாசத்திரம் ஒன்றியத் தலைவர் ஜலீல் முஹைதீன், நகரத் தலைவர் ஆனந்த கிருஷ்ணன் மற்றும் பல மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டார்கள்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் புதன்கிழமை அன்று நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பூங்கோதை தலைமை வகித்தார். மாற்றுத் திறனாளிகள் நல மாவட்ட அலுவலர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான நலச் சங்க மாவட்டத் தலைவர் பஹாத் அகமது, மாவட்ட துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் சந்தித்து வரும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் குறைகள் குறித்து அதிகாரிகள் கேட்டறிந்தனர்.
மாற்றுத்திறனாளிகள் சார்பில், உதவித்தொகை கோரி கொடுக்கப்பட்ட மனுக்களில், ஏற்கப்பட்ட மனுக்களின் முன்னுரிமைப் பட்டியல் குறித்து சங்க நிர்வாகிகள் விபரம் கேட்டறிந்தனர். மாற்றுத் திறனாளிகள் கோரிக்கையை ஏற்று, பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் உள்ள இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில், மாற்றுத்திறனாளிகள் வாகனங்கள் நிறுத்த தனியாக இடம் ஒதுக்கப்படும். இதனைச் செய்ய ஒப்பந்ததாரர் தவறும் பட்சத்தில், அவரது உரிமம் ரத்து செய்யப்படும் எனவும், அரசு மற்றும் தனியார் கட்டடங்களில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில், கைப்பிடி வசதியுடன், சாய்தள அமைப்பு ஏற்படுத்த அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில், வட்டாட்சியர்கள், நகராட்சி ஆணையர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள், பட்டுக்கோட்டை ஒன்றியத் தலைவர் குமரேசன், சேதுபாவாசத்திரம் ஒன்றியத் தலைவர் ஜலீல் முஹைதீன், நகரத் தலைவர் ஆனந்த கிருஷ்ணன் மற்றும் பல மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டார்கள்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.