அதிராம்பட்டினம், ஜூன் 13
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் இளைஞர்கள் கால்பந்துக் கழகம் 25 ஆம் ஆண்டு, எஸ்.எஸ்.எம் குல் முகமது நினைவு 19 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி, கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் கடந்த ஜூன் 05 ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
தொடர் போட்டியில், காரைக்குடி, காரைக்கால், நாகூர், சென்னை, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, திருச்சி, தஞ்சை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, கறம்பயம், ஆலத்தூர், புதுக்கோட்டை, கண்டனூர், கோவை, மன்னார்குடி, பாண்டிச்சேரி, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட 28 அணிகள் கலந்துகொண்டு விளையாட உள்ளனர்.
நேற்று புதன்கிழமை நடைபெற்ற தொடர் போட்டியின் 8-வது நாள் ஆட்டத்தில் தஞ்சாவூர் செவன்ஸ் தஞ்சாவூர் அணி, அத்திக்கடை ஆகிய அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட முடிவில் இரு அணிகளும் கோல் ஏதும் போடாமல் சம நிலையில் இருந்தனர். பின்னர், ட்ரை பிரேக்கர் வாய்ப்பு வழங்கப்பட்டன, முடிவில் தஞ்சாவூர் அணி வெற்றி பெற்றது.
நிகழ்ச்சியினை, இப்ராஹீம் தொகுத்து வழங்கினார். ஆட்ட நடுவர்களாக கால்பந்தாட்ட பயிற்சியாளர்கள் லியாகத்அலி, மூர்த்தி ஆகியோர் பொறுப்பு வகித்தனர். நேற்றைய ஆட்டத்தைக்காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் ஊர் பிரமுகர்கள் மைதானத்திற்கு வருகை தந்து ரசித்தனர்.
தொடர் போட்டி முடிவில் சாம்பியன் பட்டம் பெறுகின்ற அணிக்கு ரூ.30 ஆயிரம் ரொக்கம் மற்றும் சுழற்கோப்பை பரிசும், ரன்னர் பட்டம் பெறுகின்ற அணிக்கு ரூ.25 ஆயிரம் ரொக்கம் மற்றும் சுழற்கோப்பை பரிசும், தொடர் போட்டியில் ஆட்ட நாயகன் தேர்வு பெரும் வீரருக்கு தங்க நாணயம் பரிசும் வழங்கப்பட உள்ளது. மேலும், தொடர் போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துகின்ற வீரர்களுக்கு சிறப்பு பரிசுகள், கேடயப்பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
நாளை (ஜூன் 13) வியாழக்கிழமை தஞ்சை நேதாஜி புட்பால் கிளப் அணி, கலைவாணர் செவன்ஸ் கண்டனூர் ஆகிய அணிகள் விளையாட உள்ளனர். ஆட்டம் மாலை சரியாக 5.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் இளைஞர்கள் கால்பந்துக் கழகம் 25 ஆம் ஆண்டு, எஸ்.எஸ்.எம் குல் முகமது நினைவு 19 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி, கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் கடந்த ஜூன் 05 ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
தொடர் போட்டியில், காரைக்குடி, காரைக்கால், நாகூர், சென்னை, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, திருச்சி, தஞ்சை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, கறம்பயம், ஆலத்தூர், புதுக்கோட்டை, கண்டனூர், கோவை, மன்னார்குடி, பாண்டிச்சேரி, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட 28 அணிகள் கலந்துகொண்டு விளையாட உள்ளனர்.
நேற்று புதன்கிழமை நடைபெற்ற தொடர் போட்டியின் 8-வது நாள் ஆட்டத்தில் தஞ்சாவூர் செவன்ஸ் தஞ்சாவூர் அணி, அத்திக்கடை ஆகிய அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட முடிவில் இரு அணிகளும் கோல் ஏதும் போடாமல் சம நிலையில் இருந்தனர். பின்னர், ட்ரை பிரேக்கர் வாய்ப்பு வழங்கப்பட்டன, முடிவில் தஞ்சாவூர் அணி வெற்றி பெற்றது.
நிகழ்ச்சியினை, இப்ராஹீம் தொகுத்து வழங்கினார். ஆட்ட நடுவர்களாக கால்பந்தாட்ட பயிற்சியாளர்கள் லியாகத்அலி, மூர்த்தி ஆகியோர் பொறுப்பு வகித்தனர். நேற்றைய ஆட்டத்தைக்காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் ஊர் பிரமுகர்கள் மைதானத்திற்கு வருகை தந்து ரசித்தனர்.
தொடர் போட்டி முடிவில் சாம்பியன் பட்டம் பெறுகின்ற அணிக்கு ரூ.30 ஆயிரம் ரொக்கம் மற்றும் சுழற்கோப்பை பரிசும், ரன்னர் பட்டம் பெறுகின்ற அணிக்கு ரூ.25 ஆயிரம் ரொக்கம் மற்றும் சுழற்கோப்பை பரிசும், தொடர் போட்டியில் ஆட்ட நாயகன் தேர்வு பெரும் வீரருக்கு தங்க நாணயம் பரிசும் வழங்கப்பட உள்ளது. மேலும், தொடர் போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துகின்ற வீரர்களுக்கு சிறப்பு பரிசுகள், கேடயப்பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
நாளை (ஜூன் 13) வியாழக்கிழமை தஞ்சை நேதாஜி புட்பால் கிளப் அணி, கலைவாணர் செவன்ஸ் கண்டனூர் ஆகிய அணிகள் விளையாட உள்ளனர். ஆட்டம் மாலை சரியாக 5.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.