.

Pages

Sunday, June 30, 2019

துபையிலிருந்து மங்களூரு வந்த விமானம் விபத்தில் சிக்கியது (படங்கள்)

அதிரை நியூஸ்: ஜூன் 30
இன்று (30.06.2019 ஞாயிறு) மாலை சுமார் 5.40 மணியளவில் மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஓடுபாதையில் விலகி விபத்திற்குள்ளானது.

இன்று துபையிலிருந்து 181 பயணிகள், 2 விமானிகள் மற்றும் 6 விமான ஊழியர்களுடன் புறப்பட்டு வந்து விபத்தில் சிக்கியது எனினும் பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

விமான ஓடுதளத்திலிருந்து விமான நிலையத்தில் டேக்ஸிவே எனப்படும் விமான நிறுத்தத்தை நோக்கி வந்தபோது விமானம் புல்தரை மண்ணிற்குள் சறுக்கிச் சென்று புதைந்ததால் தான் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

கண்ணீர் நினைவலைகள்:
கடந்த 2010 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி அதிகாலை 6 மணியளவில் இதேபோல் துபையிலிருந்து மங்களூர் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி 158 பயணிகள் உயிரிழந்தது இந்தியர்கள் மத்தியில் சோக அலையை எழுப்பியிருந்தது நினைவு கூறத்தக்கது.

Source: Indian Express
தமிழில்: நம்ம ஊரான் 
 
 
 
 
  
 
 
 
 
  
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.