அதிராம்பட்டினம், ஜூன் 23
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி 2019-2020 ஆம் கல்வியாண்டில் இளங்கலை முதலாம் ஆண்டில் இணைந்த மாணவ, மாணவிகளுக்கான வரவேற்பு மற்றும் வகுப்பு தொடக்க விழா நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரிச் செயலர் எஸ்.ஜெ அபுல் ஹசன் தலைமை வகித்தார்.
கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் கலந்துகொண்டு பேசிய வாழ்த்துரையில்; கல்லூரி தோன்றிய வரலாறு, இளங்கலை பட்டபடிப்பு முதல் முனைவர் பட்டப்படிப்பு வரை கல்லூரியில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடப்பிரிவுகள், நடப்பாண்டில் புதிதாக இடம்பிடித்துள்ள பாடப்பிரிவுகள், கல்லூரி கட்டமைப்பு வசதிகள், பல்கலைகழக அளவில் கல்லூரி நிகழ்த்திய சாதனைகள், மாணவ, மாணவிகளின் ஒழுக்கம், நேரந்தவறாமை, படிப்பில் கவனம் செலுத்துதல், பெற்றோருக்கான அறிவுரை ஆகியவற்றை வழங்கினார். மேலும், விழாவில் கலந்துகொண்ட கல்லூரி அனைத்து துறைத்தலைவர்கள் வாழ்த்திப் பேசினர்.
முன்னதாக, பேராசிரியர் ஏ.எம் உதுமான் முகையதீன் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சிகள் அனைத்தையும் பேராசிரியர் மேஜர் பி.கணபதி தொகுத்து வழங்கி விழா முடிவில் நன்றி கூறினார். விழாவில், கல்லூரி துணை முதல்வர்கள் எம். முகமது முகைதீன், என்.ஏ முகமது பாருக் மற்றும் பேராசிரியர்கள் அலுவலக ஆய்வகப் பணியாளர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி 2019-2020 ஆம் கல்வியாண்டில் இளங்கலை முதலாம் ஆண்டில் இணைந்த மாணவ, மாணவிகளுக்கான வரவேற்பு மற்றும் வகுப்பு தொடக்க விழா நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரிச் செயலர் எஸ்.ஜெ அபுல் ஹசன் தலைமை வகித்தார்.
கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் கலந்துகொண்டு பேசிய வாழ்த்துரையில்; கல்லூரி தோன்றிய வரலாறு, இளங்கலை பட்டபடிப்பு முதல் முனைவர் பட்டப்படிப்பு வரை கல்லூரியில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடப்பிரிவுகள், நடப்பாண்டில் புதிதாக இடம்பிடித்துள்ள பாடப்பிரிவுகள், கல்லூரி கட்டமைப்பு வசதிகள், பல்கலைகழக அளவில் கல்லூரி நிகழ்த்திய சாதனைகள், மாணவ, மாணவிகளின் ஒழுக்கம், நேரந்தவறாமை, படிப்பில் கவனம் செலுத்துதல், பெற்றோருக்கான அறிவுரை ஆகியவற்றை வழங்கினார். மேலும், விழாவில் கலந்துகொண்ட கல்லூரி அனைத்து துறைத்தலைவர்கள் வாழ்த்திப் பேசினர்.
முன்னதாக, பேராசிரியர் ஏ.எம் உதுமான் முகையதீன் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சிகள் அனைத்தையும் பேராசிரியர் மேஜர் பி.கணபதி தொகுத்து வழங்கி விழா முடிவில் நன்றி கூறினார். விழாவில், கல்லூரி துணை முதல்வர்கள் எம். முகமது முகைதீன், என்.ஏ முகமது பாருக் மற்றும் பேராசிரியர்கள் அலுவலக ஆய்வகப் பணியாளர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.