.

Pages

Thursday, June 20, 2019

அதிராம்பட்டினத்தில் நாளை(ஜூன் 21) முதல் AFFA கால்பந்து தொடர் போட்டி: 22 அணிகள், தினசரி 2 ஆட்டங்கள்!

AFFA நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்
அதிராம்பட்டினம், ஜூன் 20
தஞ்சை மாவட்டம், அதிரை பிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் ( AFFA ) நடத்தும் 16 வது ஆண்டு மாநில அளவிலான தலை சிறந்த கால்பந்து அணிகள் பங்கு பெரும் மாபெரும் எழுவர் கால்பந்தாட்ட தொடர் போட்டி நாளை (ஜூன் 21) வெள்ளிக்கிழமை மாலை சரியாக 4.45 மணியளவில், அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை சாலை ஷிஃபா மருத்துவமனை எதிரே அமைந்துள்ள கிராணி விளையாட்டு மைதானத்தில் தொடங்க உள்ளது.

தினசரி 2 ஆட்டங்கள் நடைபெற உள்ளது. மொத்தம் 13 நாட்கள் நடைபெறும் ஆட்டங்களில், சென்னை, கேரளா, பாண்டிச்சேரி, காயல்பட்டினம், தூத்தூர், திருச்சி, கோவை, மதுரை, அதிராம்பட்டினம் உள்ளிட்ட தலைசிறந்த மொத்தம் 22 அணிகள் கலந்துகொண்டு விளையாட உள்ளனர்.

நாளை (ஜூன் 21) வெள்ளிக்கிழமை நடைபெறும் முதல்நாள் ஆட்டத்தை  அதிராம்பட்டினம் காவல் ஆய்வாளர் ஜெயமோகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தொடங்கி வைக்கிறார். முதல் ஆட்டத்தில், மார்க்ஸ் மன்னார்குடி, மதுரை போலீஸ் ஆகிய அணிகளும், இரண்டாம் ஆட்டத்தில், கலைவானர்ஸ் எப்.சி கண்டனூர், ஸ்போர்ட்ஸ் ஃபனடிக்ஸ் தேனி ஆகிய அணிகள் மோத உள்ளனர்.

தொடர் போட்டியின் வின்னர் அணிக்கு ரூ.30,016 பரிசும், ரன்னர் அணிக்கு ரூ. 20,016 பரிசும் வழங்கப்பட உள்ளன. மேலும், தொடரில் சாதனை நிகழ்த்தும் தலை சிறந்த வீரர்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

தொடர் ஆட்டங்களைக் காண அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புறப் பகுதி விளையாட்டு பிரியர்கள் ~ ஆர்வலர்கள் ~ இளைஞர்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்க AFFA நிர்வாகம் சார்பில் அழைப்பு விடப்பட்டுள்ளது.

முன்னதாக கால்பந்து தொடர் போட்டிகளை வழி நடத்தி செல்வது குறித்த  நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது. இதில், AFFA நிர்வாகிகள் எம்.ஏ முகமது தமீம், அகமது அனஸ், சேக் தம்பி, சமியுல்லா, எல்.எம்.எஸ் முகமது புஹாரி மற்றும் கால்பந்து பயிற்சியாளர்கள், வீரர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.