அதிராம்பட்டினம், ஜூன் 02
லயன்ஸ் சங்கம் சார்பில், அனைத்து சமயத்தவர் கலந்துகொண்ட 'இஃப்தார்' எனும் மத நல்லிணக்க நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை பட்டுக்கோட்டை சாலை லாவண்யா திருமண மஹாலில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, லயன்ஸ் இஃப்தார் விழா மாவட்டத் தலைவர் சாரா எம். அகமது தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக, லயன்ஸ் சங்க மாவட்ட ஆளுநர் எச். சேக்தாவூது நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். 'நோன்பின் மாண்பு' குறித்து பேராசிரியர் தேங்கை சரபுதீன் சிறப்புரையாற்றி முடிவில் பிரார்த்தனை செய்தார். இந்நிகழ்ச்சியில், நோன்பு கஞ்சி, பேரிச்சை பழம், வடை கறி, சமூசா, கடல்பாசி, பழ ஜூஸ் உள்ளிட்ட உணவு வகைகள் பரிமாறப்பட்டன.
நிகழ்ச்சி ஏற்பாட்டினை, அதிராம்பட்டினம் சாரா மற்றும் லாவண்யா திருமண மஹால்களின் உரிமையாளரும், லயன்ஸ் சங்க இஃப்தார் விழா மாவட்டத் தலைவருமாகிய சாரா எம்.அகமது செய்திருந்தார்.
இதில், லயன்ஸ் சங்க மண்டலத்தலைவர் இன்ஜினியர் கே.ஸ்ரீராம், முன்னாள் மாவட்ட ஆளுநர் ஆடிட்டர் ராஜகோபால், லயன்ஸ் சங்க நிர்வாகிகள் மன்னார்குடி டாக்டர் அசோக்குமார், டாக்டர் தர்மராஜ், எஸ்.கோவிந்தராஜ், ராஜ்குமார், கும்மிடித்திடல் கோவிந்தராஜ் மற்றும் லயன்ஸ் இஃப்தார் ஒருங்கிணைப்பு குழுவினர்கள் பேராசிரியர் ஹாஜி எம்.ஏ அப்துல் காதர், எம். அப்துல் ரஹ்மான், எம்.அப்துல் ஜலீல், ஹாஜி எஸ்.எம் முகமது முகைதீன், பேராசிரியர் எஸ்.பி கணபதி, பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர், ஹாஜி எம்.நெய்னா முகமது, ஹாஜி எஸ்.ஏ அப்துல் ஹமீது, ஆர்.செல்வராஜ், என்.யூ ராமமூர்த்தி, டி.பி.கே ராஜேந்திரன், சி.சார்லஸ், என்.எம்.எஸ் ஜெஹபர் அலி, பேராசிரியர் கே.முருகானந்தம், எம்.சாகுல் ஹமீது, பி.பிச்சமுத்து, என்.ஆருமுகச்சாமி, சேக்கனா எம்.நிஜாமுதீன் உட்பட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், ஜமாத்தார்கள், கிராம பஞ்சயாத்தார்கள், லயன்ஸ் சங்க நிர்வாகிகள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரையும், லயன்ஸ் இஃப்தார் விழா மாவட்டத் தலைவர் சாரா எம். அகமது மற்றும் அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் அன்புடன் வரவேற்று உபசரித்து மகிழ்ந்தனர்.
லயன்ஸ் சங்கம் சார்பில், அனைத்து சமயத்தவர் கலந்துகொண்ட 'இஃப்தார்' எனும் மத நல்லிணக்க நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை பட்டுக்கோட்டை சாலை லாவண்யா திருமண மஹாலில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, லயன்ஸ் இஃப்தார் விழா மாவட்டத் தலைவர் சாரா எம். அகமது தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக, லயன்ஸ் சங்க மாவட்ட ஆளுநர் எச். சேக்தாவூது நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். 'நோன்பின் மாண்பு' குறித்து பேராசிரியர் தேங்கை சரபுதீன் சிறப்புரையாற்றி முடிவில் பிரார்த்தனை செய்தார். இந்நிகழ்ச்சியில், நோன்பு கஞ்சி, பேரிச்சை பழம், வடை கறி, சமூசா, கடல்பாசி, பழ ஜூஸ் உள்ளிட்ட உணவு வகைகள் பரிமாறப்பட்டன.
நிகழ்ச்சி ஏற்பாட்டினை, அதிராம்பட்டினம் சாரா மற்றும் லாவண்யா திருமண மஹால்களின் உரிமையாளரும், லயன்ஸ் சங்க இஃப்தார் விழா மாவட்டத் தலைவருமாகிய சாரா எம்.அகமது செய்திருந்தார்.
இதில், லயன்ஸ் சங்க மண்டலத்தலைவர் இன்ஜினியர் கே.ஸ்ரீராம், முன்னாள் மாவட்ட ஆளுநர் ஆடிட்டர் ராஜகோபால், லயன்ஸ் சங்க நிர்வாகிகள் மன்னார்குடி டாக்டர் அசோக்குமார், டாக்டர் தர்மராஜ், எஸ்.கோவிந்தராஜ், ராஜ்குமார், கும்மிடித்திடல் கோவிந்தராஜ் மற்றும் லயன்ஸ் இஃப்தார் ஒருங்கிணைப்பு குழுவினர்கள் பேராசிரியர் ஹாஜி எம்.ஏ அப்துல் காதர், எம். அப்துல் ரஹ்மான், எம்.அப்துல் ஜலீல், ஹாஜி எஸ்.எம் முகமது முகைதீன், பேராசிரியர் எஸ்.பி கணபதி, பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர், ஹாஜி எம்.நெய்னா முகமது, ஹாஜி எஸ்.ஏ அப்துல் ஹமீது, ஆர்.செல்வராஜ், என்.யூ ராமமூர்த்தி, டி.பி.கே ராஜேந்திரன், சி.சார்லஸ், என்.எம்.எஸ் ஜெஹபர் அலி, பேராசிரியர் கே.முருகானந்தம், எம்.சாகுல் ஹமீது, பி.பிச்சமுத்து, என்.ஆருமுகச்சாமி, சேக்கனா எம்.நிஜாமுதீன் உட்பட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், ஜமாத்தார்கள், கிராம பஞ்சயாத்தார்கள், லயன்ஸ் சங்க நிர்வாகிகள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரையும், லயன்ஸ் இஃப்தார் விழா மாவட்டத் தலைவர் சாரா எம். அகமது மற்றும் அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் அன்புடன் வரவேற்று உபசரித்து மகிழ்ந்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.