.

Pages

Wednesday, June 26, 2019

தண்ணீர் பற்றாக்குறையை போக்க பைப் மூலம் அதிராம்பட்டினம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு வர எம்.கே.என் மதரஸா டிரஸ்ட் அனுமதி!

எம்.கே.என் மதரஸா டிரஸ்ட் நிர்வாகச் செயலாளர் ஹாஜி எஸ்.ஜெ அபுல்ஹசன்
அதிராம்பட்டினம், ஜூன் 26
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் போதிய மழையில்லாததால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை போக்க எம்.கே.என் மதரஸாவுக்கு சொந்தமான நிலத்தில் பைப் மூலம் தண்ணீர் கொண்டுவர நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து எம்.கே.என் மதரஸா டிரஸ்ட் நிர்வாகச் செயலாளர் ஹாஜி எஸ்.ஜெ அபுல்ஹசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பது;
'அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் மழை இன்றி குடிதண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதை போக்க எம்.கே.என் மதரஸாவுக்கு சொந்தமான சேண்டாக்கோட்டை கிராமத்திலிருந்து வரும் நிலத்தில் டி.ஐ பைப் மூலம் அதிராம்பட்டினம் நகருக்கு குடிதண்ணீர் கொண்டுவர எங்களிடம் அனுமதி கோரியதின் அடிப்படையில் தமிழ்நாடு வஃக்பு வாரியத்திற்கு கடிதம் மூலமும், நேரிலும் தெரிவித்தும், தஞ்சாவூர் வஃக்பு கண்காணிப்பாளருக்கு குடிதண்ணீர் பற்றாக்குறையை விளக்கியதின் பேரிலும் அனுமதி பெற்று எங்களிடம் அனுமதி கேட்ட அதிராம்பட்டினம் பேரூராட்சி செயலர் அவர்களுக்கு அனுமதி வழங்கி உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது' என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 comment:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் ,

    சகோதரரே ஏன் முன்னுக்கு பின் முரணான பதிவை போடுகிறீர்கள் ,

    1 பதிவு
    1 குடிதண்ணீர் கொண்டுவர எங்களிடம் அனுமதி கோரியதின் அடிப்படையில்

    அனுமதி யார் கோரியது ?
    1அதிரை நீர்நிலை அறகட்டளையா
    அல்லது
    2 பேரூராட்சியா ,

    2 பதிவு
    அதிராம்பட்டினம் பேரூராட்சி செயலர் அவர்களுக்கு அனுமதி வழங்கி உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது,

    அனுமதி ,பேப்பர் மூலம் அல்லது ,தொலைபேசி மூலம்

    நேற்றைய தினம் 28/06/2019 அன்று ஜும்மாவுக்கு பின் அதிரை நீர்நிலை அறகட்டளை சார்பில் 70 நபர்கள் குழு அதிரை பேரூராட்சி சென்று செயல் அலுவலரை சந்தித்து பேசியதில் ,அதில் அவர் எந்த அனுமதி பேப்பறும் (MKM TRUST) மூலம் வர வில்லை என்றும் அப்படி ஒரு சம்பவம் இல்லை என்று சொல்லி உள்ளார் ஆகவே இதன் அடிப்படை நோக்ககங்கள் என்ன என்பதை தயவு கூர்ந்து தெளிவான மறு பதிவு இட வேண்டுகிறேன் .
    அல்லாஹ் கறீம் .

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.