.

Pages

Tuesday, June 11, 2019

திருவாரூர் ~ காரைக்குடி ரயில் சேவையில் மாற்றம்!

அதிராம்பட்டினம், ஜூன் 11
திருவாரூர் ~ காரைக்குடி பயணிகள் ரயில் சேவையில் மாற்றம். வாரத்தில் 6 நாட்களிலிருந்து 3 நாட்கள் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

திருவாரூர் ~ பட்டுக்கோட்டை ~ காரைக்குடி இடையே பயணிகள் சிறப்பு ரயில் கடந்த ஜூன் 01 முதல் திருவாரூரிலிருந்து (வண்டி எண்: 06847) காலை 8.15 மணிக்குப் புறப்பட்டு திருத்துறைப்பூண்டி, தில்லைவிளாகம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, ஒட்டங்காடு, பேராவூரணி, ஆயங்குடி, அறந்தாங்கி, வாளரமாணிக்கம், பெரியகோட்டை, பெரியகோட்டை, புதுவயல், கண்டனூர் வழியாக காரைக்குடி ரயில் நிலையத்திற்கும், எதிர் மார்க்கத்தில், காரைக்குடியில் இருந்து (வண்டி எண்: 06848) பிற்பகல் 14.30 மணிக்குப் புறப்பட்டு, இரவு 20.30 மணிக்கு திருவாரூர் ரயில் நிலையத்திற்கு சென்றுகொண்டிருந்தது. இந்த பயணிகள் ரயில் சேவை வரும் ஆகஸ்ட் 30 ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து வாரத்தில் 6 நாட்கள் மட்டும் இயங்கும் என தென்னக ரயில்வே அறிவித்து இருந்தது.

இந்நிலையில், நாளை (ஜூன் 12) புதன்கிழமை முதல், வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் திருவாரூரிலிருந்து காலை 8.15 மணிக்கு புறப்பட்டு, மாலை 4.15 மணிக்கு காரைக்குடி சென்றடையும் என்றும், செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாட்களில் காரைக்குடியில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்பட்டு, மாலை 5.45 மணிக்கு திருவாரூர் வந்தடையும் என்றும், பின்னர், அதே ரயில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.10 மணிக்கு திருச்சிக்கு செல்லும் என்றும், அங்கிருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு திருவாரூர் ரயில் நிலையத்திற்கு இரவு 10.45 மணிக்கு வந்து சேரும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.