தஞ்சை மாவட்ட கலெக்டர் சுப்பையன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் ஆகிய பணி நாளை (புதன்கிழமை) முதல் தொடங்க உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆயிரத்து 111 சிறப்பு முகாம்களில் விரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. குடும்ப உறுப்பினர்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா? என்பதை சரிபார்த்து கொள்ளலாம். தஞ்சை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் மற்றும் 1.1.2015 அன்று 18 வயது பூர்த்தியாகும் நபர்கள் படிவம் 6-யை பூர்த்தி செய்து தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
பெயர்களை நீக்கம் செய்ய படிவம்-7, பதிவுகளில் திருத்தம் செய்ய படிவம்-8, ஒரே தொகுதிக்குள் இடம் பெயர்ந்தவர்கள் படிவம்-8ஏ மற்றும் வெளிநாடு வாழ் வாக்காளர்கள் படிவம்-6ஏ ஆகியவற்றை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய ஆவணங்களுடன் அதற்கான நகலுடன் இணைத்து வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலங்களில் நாளை முதல் அடுத்தமாதம்(நவம்பர்) 10-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
மேலும் சிறப்பு முகாம்கள் வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் வருகிற 26 மற்றும் அடுத்த மாதம் 2 ஆகிய தேதிகளில் நடக்கிறது. எனவே பொதுமக்கள் உரிய படிவங்களை பெற்று பூர்த்தி செய்து முகாம் நடைபெறும் இடங்களில் சமர்ப்பிக்கலாம். இதுதவிர பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் ஆகியவற்றை தேர்தல் இணையதளம் மூலமும் விண்ணப்பிக்கலாம்.
தஞ்சை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் ஆகிய பணி நாளை (புதன்கிழமை) முதல் தொடங்க உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆயிரத்து 111 சிறப்பு முகாம்களில் விரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. குடும்ப உறுப்பினர்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா? என்பதை சரிபார்த்து கொள்ளலாம். தஞ்சை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் மற்றும் 1.1.2015 அன்று 18 வயது பூர்த்தியாகும் நபர்கள் படிவம் 6-யை பூர்த்தி செய்து தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
பெயர்களை நீக்கம் செய்ய படிவம்-7, பதிவுகளில் திருத்தம் செய்ய படிவம்-8, ஒரே தொகுதிக்குள் இடம் பெயர்ந்தவர்கள் படிவம்-8ஏ மற்றும் வெளிநாடு வாழ் வாக்காளர்கள் படிவம்-6ஏ ஆகியவற்றை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய ஆவணங்களுடன் அதற்கான நகலுடன் இணைத்து வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலங்களில் நாளை முதல் அடுத்தமாதம்(நவம்பர்) 10-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
மேலும் சிறப்பு முகாம்கள் வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் வருகிற 26 மற்றும் அடுத்த மாதம் 2 ஆகிய தேதிகளில் நடக்கிறது. எனவே பொதுமக்கள் உரிய படிவங்களை பெற்று பூர்த்தி செய்து முகாம் நடைபெறும் இடங்களில் சமர்ப்பிக்கலாம். இதுதவிர பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் ஆகியவற்றை தேர்தல் இணையதளம் மூலமும் விண்ணப்பிக்கலாம்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.