.

Pages

Tuesday, October 14, 2014

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு !

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் கு. கலைச்செல்வன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
தமிழக அரசின் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ரூ. 100-ம் ( மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 300 ), தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 150-ம் ( மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 300 ), மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 200-ம் ( மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 375 ), பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ. 300-ம் (மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 450) வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை பெற தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது.

மேலும் http://tnvelaivaaippu.gov.in/Empower/ என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த உதவித்தொகை பெற விரும்புவோர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு ஓராண்டும் நிறைவு பெற்றிருக்க வேண்டும். இந்த உதவித்தொகையை எஸ்சி, எஸ்டி பிரிவினர் 45 வயது வரையும், இதர பிரிவினர் 40 வயது வரையும் பெற தகுதியுடையவர் ஆவர்.

மேலும் பொதுப்பிரிவினரின் ஆண்டு வருமானம் ரூ. 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு ஆண்டு வருமானத்தில் விலக்களிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் அனைத்து கல்விச்சான்றுகள் அசலுடனும், பதிவு செய்த வேலைவாய்ப்பு அடையாள அட்டை அசல் மற்றும் கணினியில் பதிவிறக்கம் செய்யப்பட்ட அட்டை, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை அசல் மற்றும் நகல், வட்டாட்சியர் அலுவலக வருவாய் ஆய்வாளரிடம் பெறப்பட்ட ஒருங்கிணைந்த தகுதிச்சான்று ( இது மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையில்லை ), பாஸ்போர்ட் அளவு புகைப்படம், விண்ணப்பதாரர் பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் புதிதாக தொடங்கப்பட்ட வங்கிக்கணக்கு புத்தக அசல் மற்றும் நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

தகுதியுள்ள விண்ணப்பதாரருக்கு உதவித்தொகை காலாண்டுக்கு ஒருமுறை 3 ஆண்டுகளுக்கு அவருடைய வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். இதற்கான விண்ணப்பத்தினை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10 மணி முதல் வேலைவாய்ப்பு பதிவு அலுவலக அடையாள அட்டையுடன் நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.