அதிரை காவல்துறை சார்பில் விநாயக சதூர்த்தி ஊர்வலத்தை ஏற்று நடத்தும் அமைப்பினர் மற்றும் அதிரையில் செயல்படும் அனைத்து சமூக அமைப்புகள், அதிரை வர்த்தக சங்கம், ஜமாத் நிர்வாகிகள் ஆகியோரை தனித்தனியே அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்படுவது வழக்கம்.
அதிரை காவல்துறையின் சார்பில் இன்று மாலை ஏற்பாடு செய்யப்பட்ட அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் காவல்நிலையத்தில் நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு பட்டுக்கோட்டை டிஎஸ்பி பிச்சை தலைமை வகித்தார்.
அதிரை காவல்துறையின் அழைப்பை ஏற்று ஜமாத் நிர்வாகிகள், டிஎன்டிஜே, தமுமுக, மனிதநேய மக்கள் கட்சி, அதிரை எஸ்டிபிஐ, பாப்புலர் ப்ராண்ட் ஆஃப் இந்தியா, அதிரை தாருத் தவ்ஹீத், இஸ்லாமிய ஜனநாயக முன்னணி, ஐக்கிய தேசிய மக்கள் கட்சி ஆகிய அமைப்புகளை சேர்ந்த அதிரை பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர்.
பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டரிடம் கருத்துகள் பெறப்பட்டன. கருத்துகள் அனைத்தும் கவனமாக குறிப்புகள் எடுத்துக்கொள்ளப்பட்டது. மேலும் ஊர்வலத்தில் எவ்வித அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் ஒத்துழைப்பு வழங்க காவல்துறையின் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டது.
நம் சமுதாய அமைப்புகளும் இந்து முன்னணியும் காவல் நிலையத்திற்குப் போய், என்னவெல்லாம் பேசினார்கள்? என்னவெல்லாம் உடன்பாடுகள் ஏற்கப்பட்டன என்ற ஒரு விவரமும் இல்லாத பதிவு..! புகைப் படங்கள் மட்டும் போதுமா? விவரம் வேண்டாமா?
ReplyDeleteஇன்று இன்னொரு சமூக வலைத்தளத்தில் வெளியான செய்தியில், காவல்துறை எச்சரிக்கை விட்டது போன்ற கருத்தில் அமைந்த தகவல் இடம் பெற்றிருந்தது..!
//இது குறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் நமது அதிரை பிறை செய்தியாளரிடம் கூறுகையில் “பலத்த பாதுகாப்புடன் இந்த விநாயகர் ஊர்வலம் நடத்தப்படுகிறது, இதனை சீர்குலைக்கும் வகையிலும், அசம்பாவிதத்தை தூண்டும் செயல்களிலும், பொதுமக்களை துன்புறுத்தும் வகையில் யாரவது ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்!//
இதன் அர்த்தமென்ன?
என்ன நடக்கிறது இங்கே? சமுதாய அமைப்புகள் எங்கே? எதற்காகக் காவல் நிலையம்? காவல் நிலையம் 'காவி நிலையம்' ஆகிவிட்டதோ?