இந்த நிலையில் கடந்த இரு தினங்களாக திருவாரூர் எஸ்.பி.ஜெயசந்திரன் முத்துப்பேட்டையில் முகாமிட்டு எஸ்.டி.பி.ஐ.கட்சியினர் மற்றும் அனைத்து ஜமாத் நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து கருத்துக் கேட்டறிந்தார். மேலும் நேற்று காலை விநாயகர் சிலை ஊர்வல கமிட்டியினரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இந்த நிலையில் நேற்று மாலை திருச்சி சரக ஐ.ஜி.ராமசுப்பிரமணியம் விநாயகர் சிலை ஊர்வல பாதையைப் பார்வையிட வந்திருந்தார். முன்னதாக வனத்துறை அலுவலக கட்டிடத்தில் காவல் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தியவர் பின்னர் ஊர்வலம் துவங்கும் ஜாம்புவானோடை வடக்காடு, சிவன் கோவில் பகுதியைப் பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஜாம்புவானோடை தர்கா, கோரையாற்று பாலம் ஆகியயை பார்வையிட்ட அவர் பதற்றமான பகுதியான ஆசாத் நகர் மெயின் ரோட்டில் நின்று அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினர். பின்னர் பழைய பேருந்து நிலையத்தைப் பார்வையிட்டவர் சர்ச்சைக்குரிய பகுதியான நியூ பஜார், கொய்யா முக்கம், பங்களா வாசல், ஓடக்கரை, பட்டுக்கோட்டை சாலையில் நடந்து சென்று பார்வையிட்டார். பின்னர் விநாயகர் சிலை கரைக்கும் பகுதியான செம்படவன் காடு பாமினி ஆற்று பாலம் மற்றும் கரைகளை பார்வையிட்டு அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
அப்பொழுது திருவாரூர் எஸ்.பி.ஜெயசந்திரன், தஞ்சாவூர் எஸ்.பி.தர்மராஜ், நாகை எஸ்.பி.அபினபு குமார், மன்னார்குடி ஆர்.டி.ஓ. செல்வ சுரப்பி, முத்துப்பேட்டை டி.எஸ்.பி.அருண், இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை, முத்துப்பேட்டை
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.