.

Pages

Tuesday, September 1, 2015

அதிரையில் இளைஞர் பெருமன்றம் சார்பில் பிரச்சார பயணம் !

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் வரும் செப்டம்பர்-10 ந்தேதி அன்று வேலையின்மை, மதுவிலக்கு, கல்வி வியாபாரம், ஆணவக் கொலைகள், சாதிய ஒடுக்குமுறை ஆகியவற்றிற்கு எதிராக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தை நோக்கி பேரணி மற்றும் முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது.
       
போராட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் ஆகஸ்ட்-29 ந்தேதி தொடங்கி செப்டம்பர் 1, 5 ஆகிய ஐந்து தினங்கள் தஞ்சை மாவட்டத்தின் திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம், அம்மாப்பேட்டை, தஞ்சாவூர், பூதலூர், திருவையாறு, ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், சேதுபாவாசத்திரம், பேராவூரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கோரிக்கை விளக்க பிரச்சார பயணம் நடைபெற்று வருகிறது.

அதிரையில் நடைபெற்ற கோரிக்கை விளக்க தெருமுனை பிரச்சாரத்திற்கு இளைஞர் பெருமன்றம் செயலாளர் தர்மராஜ் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் நகர செயலாளர் என். காளிதாஸ், இளைஞர் பெருமன்றம் மாவட்ட பொருளாளர் எம். முஜிபூர் ரஹ்மான், இளைஞர் பெருமன்றம் நகர தலைவர் ஹாஜா முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ப. தர்மராஜ் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அதிரையில் கடைத்தெரு, பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை, பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. இதில் இளைஞர் பெருமன்றம் அமைப்பினர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.