இதற்காக தஞ்சையில் இருந்து ஜான்பாண்டியன் காரில் அக்கிராமத்துக்கு சென்றார். அவருடன் கட்சியின் மாவட்ட செயலாளர் தியாக காமராஜ் ஒரு காரிலும், கட்சியினர் மற்றொரு காரிலும் சென்றனர். அப்போது ஜான்பாண்டியனுடன் வந்த கார்கள் மீது சிலர் சரமாரி கற்களை வீசினார்கள். இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பை சேர்ந்தவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன், மாவட்ட செயலாளர் தியாக காமராஜ் ஆகியோர் மீது தாக்குதல் நடத்திய நபர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி அதிரை பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்திற்கு விவேகானந்தன் தலைமை வகித்தார். அவிஸோ அதிரை சேக் அப்துல்லா முன்னிலை வகித்தார். கண்டன உரையை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் தியாக காமராஜ் ஆற்றினார். சிறப்பு அழைப்பாளராக விசிக கட்சி அதிரை நகர செயலாளர் புருசோத்தமன் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். இதில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.