.

Pages

Tuesday, September 1, 2015

சாதனை நிகழ்த்திய காதிர் முகைதீன் பள்ளி மாணவர்களுக்கு மாநில அமைச்சர் பாராட்டு !

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், ஆர்சுத்திப்பட்டி கிராமத்தில் மாவட்ட அளவில் 48வது குடியரசு தின விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாண்புமிகு வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் திரு.ஆர்.வைத்திலிங்கம் அவர்கள் பரிசுகளை வழங்கினார்.  விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தலைமை தாங்கினார்.

இதில் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு 47 வெற்றி புள்ளிகள் பெற்று கல்வி மாவட்ட அளவில் முதலாம் இடம் பெற்றனர்.

கீழோர் பிரிவில்
1. அஜ்மல் கான் 8B     200 மீட்டர் (முதலாம் இடம்)
2. அப்சர் கான்   7A     80 மீட்டர்  தடை தாண்டுதல் (முதலாம் இடம்)
3. அஜ்மல் கான்  8B
4. ஜவ்ஹித்  8E   4X100 மீட்டர் தொடர் ஓட்டம் முதலாம் இடம்
5. முஹமது சுஹைல்     8A
6. முரளி தரன்   8C

மேலோர் பிரிவில்
1. முத்துராசு   9B  :              400 மீட்டர் , 600 மீட்டர் முதலாம் இடம்
2. ஆதில் அஹமது 10E நீளம் தான்டுதல், மும்முறைத்    தாண்டுதல்  முதலாம் இடம்
3. அப்துல் ஹமீத்    9E              100மீட்டர் தடை தாண்டுதல் முதலாம்  இடம்
4. பயாஸ் அஹமது 10C            1500 மீட்டர்   மூன்றாம் இடம்
5. முஷர்ரப்                       9E
6. முத்துராசு                    9B
7. ஆதில் அஹமது   10E          4X100 மீட்டர் தொடர் ஓட்டம் முதலாம் இடம்
8. அப்துல் ஹமீத்         9E

விழாவில் முதன்மை கல்வி அலுவலர் திரு.ரெ.திருவளர்செல்வி, அம்மாப்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் திரு.ஏ.வி.சூரியநாராயணன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திரு.வி.பஞ்சமூர்த்தி, ராகவாம்பாள்புரம் ஊராட்சி மன்ற தலைவர் திரு.வி. ராஜகோபால், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் திரு. வி.ராஜேந்திரன், பள்ளி வளர்ச்சிக்குழு துணைத் தலைவர் திரு.எம்.கோவிந்தராஜ், பள்ளி வளர்ச்சிக் குழு உறுப்பினர்கள் திரு.சி.பக்கிரிசாமி, திரு.ஆர்.ராமையன், திரு.ஏ.ராஜேந்திரன், திரு.எம்.சரவணன் மற்றும் ஏராளமான மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்.

சாதனை நிகழ்த்திய காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு வீட்டு வசதி நகர்புற வளர்ச்சித்துறை மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் திரு ஆர் . வைத்திலிங்கம் அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என். சுப்பையன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி இர. திருவளர் செல்வி ஆகியோர் முன்னிலையில் பரிசுகளையும் வெற்றிக் கோப்பையும் வழங்கி பாராட்டு தெரிவித்தார். மேலும் பள்ளி மாணவர்களை நிர்வாகம், தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் அலுவலக உதவியாளர்கள் பாராட்டினார்கள்.



No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.