கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிரை சுற்று வட்டார பகுதிகளில் பெய்த பலத்த மழையால் செடியன் குளத்தில் நீர் வரத்து அதிகரித்தது. பொதுமக்கள் குளிக்கும் அளவிற்கு தண்ணீர் நிரம்பி காட்சியளிக்கிறது. மீண்டும் சில நாட்களுக்கு மழை தொடர்ந்து பெய்தால் குளத்தின் நீர்மட்டம் உயர்ந்து வழிந்து ஓடும் நிலை எட்டிவிடும்.
செடியன் குளத்தின் தென்கரையில் பழுதடைந்த கிணறு அமைந்துள்ளது. இந்த கிணற்றின் வழியே கசிந்து வீணாக வெளியேறும் குளத்தின் நீரை பாதுகாக்கும் பொருட்டு கிண்ணற்றின் அடியில் உள்ள ஓட்டையை அடைக்கும் முயற்சியில் பெரிய ஜும்மா பள்ளி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இந்த பணிகளுக்காக ஊழியர்கள் இன்று காலை முதல் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜூம்ஆ பள்ளி நிர்வாகத்திற்கு மிக்க நன்றி!
ReplyDeleteஇந்த நன்முயற்சியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் நன்மைகளை வாரி வழங்க பிரார்த்திக்கின்றோம்.
அப்படியே செடியனின் வடிகால் ஆக்கிரமிப்புகளையும் அகற்றி, வழிந்தோடும் நீர் இடைஞ்சலின்றி செய்னாங்குளத்தை சென்றடையவும், பிலால் நகர் வெள்ள பாதிப்பிலிருந்து பாதுகாக்கப்படவும் உதவ வேண்டுகிறோம்.