இத்தகைய மாற்றுத்திறனாளிகளுக்கு தீர்வு காணும் நோக்கில், ராக்கெட் தொழில்நுட்பத்தில் ஏவுகணையின் எடையைக் குறைக்க பயன்படுத்தப்படும் பாலி புரோபைலின் எனப்படும் ‘தெர்மோ பிளாஸ்டிக் பாலிமரை’ கொண்டு வெறும் 400 கிராம் எடையில் காலிபர் ஷூவை மறைந்த 'மாமேதை' அப்துல் கலாம் உருவாக்கினார்.
மாற்றுத்திறனாளிகள் நலத் துறையினர் தற்போது வழங்கும் எடை அதிகம் கொண்ட மெட்டல், பிளாஸ்டிக் காலிபர்களைத் தவிர்த்து, கலாம் பரிந்துரைத்த எடை குறைவான காலிபர் ஷூவை பயன்படுத்தி வருகின்றனர்.
'தமிழகத்தில் 1.5 இலட்சம் மாற்றுத்திறநாளிகள் வாழ்கின்றனர். சாலை விபத்துகளில் கை, கால்ககளை இழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து
வருகிறது. அரசும், சில தனியார் தொண்டு நிறுவனங்களும் இவர்களுக்கு இலவசமாக செயற்கை மெட்டல் ஷூ வழங்குகின்றனர்.
அதிக எடை கொண்ட (4 kg) இதை அணிந்துகொண்டு வலியோடும் வேதனையோடும் வாழ்வை ஓட்டுகின்றனர். ஓடி ஆடி உழைப்பதற்கு உள்ளம் துடிக்கின்றது.ஆனால் உடல் முடங்கிபோய் கிடக்கின்றனர்.
அப்துல் கலாமின் ஆக்கப்பூர்வமான கண்டுபிடிப்பு தான் எடை குறைந்த
பாலி புரோபைலின் ஷூ (400 g) மாற்றுத் திறனாளிகள் வாழ்வில்
மறுமலர்ச்சியை ஏற்படுத்தும். விலை ஏறக்குறைய 10 ஆயிரம் ரூபாய்.
இப்படி சிந்தித்துதான் பார்ப்போமே. தமிழகத்தில் 12 மாநகராட்சிகள், 123 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள், 12,620 கிராம பஞ்சாயத்துகள் எப்படி பார்த்தாலும் குறைந்தது 10 ஆயிரம் பள்ளிவாசல்களில் வெள்ளி தோறும் ஜும்ஆ நடைபெறுகிறது. கிராம புறங்களில் உள்ள 4 ஆயிரம் பள்ளிகளை தவிர்த்துவிட்டு மீதம் உள்ள 6 ஆயிரம் பள்ளிகளில், இறைவன் நாடினால், வருகின்ற ரமலான் மாதத்தின் ஒவொரு ஜும்ஆ விலும் குறைந்தது 6 நபருக்கு இந்த அப்துல் கலாம் காலிபர் ஷூ வை பள்ளிவாசல் சார்பாக வழங்கினால், தமிழகத்தில் உள்ள 1.5 இலட்சம் மாற்றுத்திறனாளிகளும் 4 வெள்ளிக் கிழமைகளில் மறுவாழ்வு பெறுவார்.
மக்கள் தங்கள் உள்ளங்களில் பள்ளிவாசல்களை காட்டுவர் இந்திய சமூகத்திற்கு இயல்பாகவே ஒரு குணம் உண்டு. நெருக்கடியான நேரத்தில் தனக்கு உதவியவனை தான் இங்கே குல தெய்வமாக கும்பிடுகின்றனர்' என யோசனை கூறியுள்ளார்.
சகோ CMN சலீம் அவர்களின் யோசனையை ஏற்று இஸ்லாமிய சமுதாய சொந்தங்கள் தங்களின் பங்களிப்பை உறுதிபடுத்தி கொண்டால் வஞ்சிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கையை சந்தோசமாக மேற்கொள்வார்கள்.
ReplyDeleteஇது போன்ற சமூகநல மேன்பாட்டுக்கு சமுதாய இயக்கங்களும் முன் நின்று செயல்பட வேண்டும்.இறைவனின் அருள் பொருந்திய இத்தகைய நல்லறங்கள் செய்வோரை அல்லாஹ் நேசிக்கின்றான்