அதிரையை சேர்ந்தவர் பிரைட் மீரா. பழைய போஸ்ட் ஆபீஸ் பகுதியில் சொந்தமாக தொழில் நடத்தி வருகிறார். இவருக்கு கிடைக்கும் ஓய்வான நேரத்தில் பயனுள்ள வகையில் பல அறிய புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகிறார். குறிப்பாக இந்திய தேசத்தின் மீது தான் கொண்டுள்ள அளவில்லா பற்றுதலை பறைசாற்றும் விதமாக ஒவ்வொரு சுதந்திர தினம், குடியரசு தினத்தன்றும் பல கண்டுபிடிப்புகளை தனது சொந்த செலவில் பல்வேறு நுணுக்கங்களோடு தொடர்ந்து உருவாக்கி வருகிறார். இதற்காக தனது வீட்டில் கூடுதலான நேரங்களை ஒதுக்கி ஆர்வத்துடன் செய்து வருகிறார். இவருடைய படைப்புகளை ஏராளமான பள்ளி கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் வியப்புடன் பார்வையிட்டு இவரை பாராட்டிச் செல்கின்றனர். இவரின் படைப்பாற்றலை வியந்த பலர் 'இளம் விஞ்ஞானி' என அன்புடன் அழைக்கப்படுகிறார்.
இவருடைய அசத்தலான கண்டுபிடிப்புகளை பிறர் கண்டு மகிழ்வது இவருக்கு கூடுதலான உற்சாகத்தை தருகின்றது. இவருடைய தயாரிப்புகளுக்கு அங்கீகாரமாக பல்வேறு தனியார் தொலைக்காட்சிகளும், இணையதளங்களும், பத்திரிக்கைகளும் இவர் உருவாக்கிய பல படைப்புகளை படம்பிடித்து செய்தியாக பரப்பி வருகின்றன. மேலும் தனது நாட்டை நேசிக்கும் பண்பின் காரணமாக 'தேசபற்று மிக்கவர்' என்ற விருதும் பெற்றுள்ளார்.
மறைந்த 'மாமேதை' அப்துல் கலாம் மீது அதிக பற்றுகொண்டுள்ள இவர் சமீபத்திய தனது புதிய கண்டுபிடிப்புக்கு 'அப்துல் கலாம்' பெயரை சூற்றி மகிழ்ந்திருக்கிறார்.
இந்நிலையில் அதிரைக்கு வருகை தந்த தமுமுக மூத்த தலைவரும் இராமநாதபுரம் சட்ட மன்ற உறுப்பினருமாகிய பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களை மறைந்த 'மாமேதை' அபுல் கலாம் பெயரில் தான் உருவாக்கிய மாதிரி கப்பலை பார்வையிட அன்புடன் அழைத்தன் பேரில் நேரில் சென்று, கலை நயத்தோடு இவர் உருவாக்கிய மாதிரி கப்பலை பார்வையிட்டு வெகுவாக பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். மேலும் தேசம் மீது இவர் கொண்டுள்ள பற்றுதலை கண்டு வியந்தார்.
'தேசபக்தர்' அதிரை பிரைட் மீரா சார்பில் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதில் மாமேதை அப்துல் கலாம் பிறந்த மண்ணில் தான் உருவாக்கிய மாதிரி கப்பலை அனைவரின் பார்வையில் படும்படி காட்சி பொருளாக வைக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
மனுவை பெற்றுக்கொண்ட பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் இவற்றை கனிவுடன் பரிசிலிப்பதாகவும், 'தேசபக்தர்' அதிரை பிரைட் மீராவின் முயற்சிக்கு தான் ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்துக்கொண்டார். சந்திப்பின் போது தமுமுக மற்றும் மமக மாநில - மாவட்ட மற்றும் அதிரை பேரூர் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இவருடைய அசத்தலான கண்டுபிடிப்புகளை பிறர் கண்டு மகிழ்வது இவருக்கு கூடுதலான உற்சாகத்தை தருகின்றது. இவருடைய தயாரிப்புகளுக்கு அங்கீகாரமாக பல்வேறு தனியார் தொலைக்காட்சிகளும், இணையதளங்களும், பத்திரிக்கைகளும் இவர் உருவாக்கிய பல படைப்புகளை படம்பிடித்து செய்தியாக பரப்பி வருகின்றன. மேலும் தனது நாட்டை நேசிக்கும் பண்பின் காரணமாக 'தேசபற்று மிக்கவர்' என்ற விருதும் பெற்றுள்ளார்.
மறைந்த 'மாமேதை' அப்துல் கலாம் மீது அதிக பற்றுகொண்டுள்ள இவர் சமீபத்திய தனது புதிய கண்டுபிடிப்புக்கு 'அப்துல் கலாம்' பெயரை சூற்றி மகிழ்ந்திருக்கிறார்.
இந்நிலையில் அதிரைக்கு வருகை தந்த தமுமுக மூத்த தலைவரும் இராமநாதபுரம் சட்ட மன்ற உறுப்பினருமாகிய பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களை மறைந்த 'மாமேதை' அபுல் கலாம் பெயரில் தான் உருவாக்கிய மாதிரி கப்பலை பார்வையிட அன்புடன் அழைத்தன் பேரில் நேரில் சென்று, கலை நயத்தோடு இவர் உருவாக்கிய மாதிரி கப்பலை பார்வையிட்டு வெகுவாக பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். மேலும் தேசம் மீது இவர் கொண்டுள்ள பற்றுதலை கண்டு வியந்தார்.
'தேசபக்தர்' அதிரை பிரைட் மீரா சார்பில் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதில் மாமேதை அப்துல் கலாம் பிறந்த மண்ணில் தான் உருவாக்கிய மாதிரி கப்பலை அனைவரின் பார்வையில் படும்படி காட்சி பொருளாக வைக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
மனுவை பெற்றுக்கொண்ட பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் இவற்றை கனிவுடன் பரிசிலிப்பதாகவும், 'தேசபக்தர்' அதிரை பிரைட் மீராவின் முயற்சிக்கு தான் ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்துக்கொண்டார். சந்திப்பின் போது தமுமுக மற்றும் மமக மாநில - மாவட்ட மற்றும் அதிரை பேரூர் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.