இதன் துவக்க விழா அதிரை அரசு மருத்துவனையில் இன்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு அதிரை பேரூராட்சி துணை தலைவர் பிச்சை தலைமை வகித்தார். அரசு மருத்தவமனை மருத்துவர்கள் சீனிவாசன், ஹாஜா முகைதீன், சுதாகர், மருந்தகர் செல்வராஜ், செவிலியர் ஆர். ராஜலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றுக் கொண்ட தாய்மார்களுக்கு முதல்–அமைச்சரின் ‘அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகம்’ வழங்கப்பட்டன. இதனை பெற்றுக் கொண்ட தாய்மார்கள் முதல்–அமைச்சருக்கும், மருத்துவமனை நிர்வாகத்துக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் அதிரை கூட்டுறவு வங்கி துணை தலைவர் முஹம்மது தமீம், அதிரை பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் உதயகுமார், சிவக்குமார், அபூதாகிர், ஹாஜா முகைதீன், அதிமுக வார்டு செயலாளர்கள் செல்வம், ஆர்.பி.எஸ் சகாபுதீன், ஷபியுல்லாஹ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகத்தில் குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் பொம்மை, கிலுகிலுப்பை, சோப்பு, சோப்பு வைக்கும் பெட்டி, சவுபாக்கிய சுண்டி லேகியம், பராமரிப்பு துண்டு, பராமரிப்பு படுக்கை, கொசுவலை, நகம் வெட்டி, நாப்கின், தாய் கை கழுவும் திரவம், குழந்தை உடை, படுக்கை, எண்ணெய், ஷாம்பு இந்த பொருட்களை வைப்பதற்கான பெட்டி ஆகிய 16 பொருட்கள் இடம்பெற்று இருந்தன.
பிறந்த குழந்தைக்கு " Woodwards Water" ( நீ குழந்தையா இருக்கும்போது .......விளம்பரம் ) பெத்த அம்மாவுக்கு Biscut Brandy, பெத்த அப்பாவுக்கு டாஸ்மாக் பார்ட்டி ..எப்படி சூப்பராக இருக்குல; உண்மையிலே ஒரு அருமையான திட்டம் தான் , அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்றுக்கொள்ளும் தாய்மார்களுக்கு என்று சொல்லுகிறார்கள் ஆனால் மருத்துவமனை எந்த லட்சணத்தில் இருக்கு என்பதை தினசரி பேபரில் பார்க்கலாம். அம்மாவிற்கு வாழ்த்துக்கள்.
ReplyDelete