ராஷ்யாவில் தொடர்ந்து 22 நாட்களாக விடியோ கேம் ஆடிய 17 வயது சிறுவன் மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் உச்சலி நகரத்தை சேர்ந்த, 17 வயது சிறுவன் ஒருவனுக்கு, வீடியோ கேம் என்றால் உயிர். இந்நிலையில் கடந்த மாதம், நடந்த விபத்து ஒன்றில், அவரது கால் எலும்பில், முறிவு ஏற்பட்டதால் வீட்டில் ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார். அப்போது, பொழுது போகாமல் போரடிக்கவே, டிபென்ஸ் ஆப் ஏன்ஷியன்ட்ஸ் எனும் வீடியோ கேம்மை ஒரு நாளைக்கு ஆறரை மணி நேரம் என்ற விதத்தில் அவர் தொடர்ந்து 22 நாட்கள் விளையாடி வந்துள்ளார். சாப்பிடும் நேரம், துாங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் இந்த விளையாட்டை அவர் விளையாடி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஒரு நாள், அவனது அறையில் இருந்து, வீடியோ கேம் விளையாடும் சத்தம் இல்லாததால், அவனது பெற்றோர் சந்தேகமடைந்து, அறைக்குள் சென்று பார்த்துள்ளனர்.
உள்ளே மயக்கத்தில் இருந்த சிறுவனை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அவனை பரிசோதித்த மருத்துவர்கள் ரத்த உறைவு நோயால் சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சரிவர கவனிக்காமல் இருப்பதாலேயே இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது என, அந்நாட்டு மனோவியல் நிபுணர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ரஷ்யாவின் உச்சலி நகரத்தை சேர்ந்த, 17 வயது சிறுவன் ஒருவனுக்கு, வீடியோ கேம் என்றால் உயிர். இந்நிலையில் கடந்த மாதம், நடந்த விபத்து ஒன்றில், அவரது கால் எலும்பில், முறிவு ஏற்பட்டதால் வீட்டில் ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார். அப்போது, பொழுது போகாமல் போரடிக்கவே, டிபென்ஸ் ஆப் ஏன்ஷியன்ட்ஸ் எனும் வீடியோ கேம்மை ஒரு நாளைக்கு ஆறரை மணி நேரம் என்ற விதத்தில் அவர் தொடர்ந்து 22 நாட்கள் விளையாடி வந்துள்ளார். சாப்பிடும் நேரம், துாங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் இந்த விளையாட்டை அவர் விளையாடி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஒரு நாள், அவனது அறையில் இருந்து, வீடியோ கேம் விளையாடும் சத்தம் இல்லாததால், அவனது பெற்றோர் சந்தேகமடைந்து, அறைக்குள் சென்று பார்த்துள்ளனர்.
உள்ளே மயக்கத்தில் இருந்த சிறுவனை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அவனை பரிசோதித்த மருத்துவர்கள் ரத்த உறைவு நோயால் சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சரிவர கவனிக்காமல் இருப்பதாலேயே இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது என, அந்நாட்டு மனோவியல் நிபுணர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.