.

Pages

Monday, September 14, 2015

அதிரை அருகே TNTJ நடத்திய இரத்த தான முகாம் !

அதிரையை அடுத்த புதுப்பட்டினத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில் இரத்த தான முகாம் நடைபெற்றது.
     
முகாமிற்கு அமைப்பின்  தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் சம்பை ஹெச்.சாதிக் பாட்சா தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் அதிரை ராஜிக் முகமது, கிளைத் தலைவர் ஹபீப் முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளைச் செயலாளர் ஹக்கீம் வரவேற்றார்.
           
புதுப்பட்டினம் அபு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் துல்கருணை சிறப்பு விருந்தினராக பங்கேற்று இரத்த தான முகாமினை தொடங்கி வைத்தார். பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை இரத்த வங்கி மருத்துவர்கள் குருதிக் கொடையாளர்களிடம் இருந்து 40 யூனிட் இரத்தத்தை தானமாக பெற்றனர்.
           
கிளை நிர்வாகிகள் முகமது உசேன், ஜியாவுதீன், உமர், பாவா  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக கிளை பொருளாளர் ஜமால் முகமது நன்றி கூறினார்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.