.

Pages

Sunday, September 13, 2015

அதிரை ஹாலித்திடம் தமுமுக / மமக மாநில நிர்வாகிகள் உடல்நலம் விசாரிப்பு !

அதிரையை சேர்ந்தவர் முஹம்மது ஹாலித். இவர் மனிதநேய மக்கள் கட்சியின் அதிரை பேரூர் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். சமீபத்தில் தவறி கீழே விழுந்ததில் இவரது கால் எலும்பு முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சைக்கு பின் மருத்துவரின் அறிவுரையின் பேரில் வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் தமுமுக மூத்த தலைவரும் இராமநாதபுரம் சட்ட மன்ற உறுப்பினருமாகிய பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், தமுமுக மாநில தலைவர் ஜே.எஸ் ரிஃபாயி. தமுமுக மாநில பொதுச் செயலாளர் அப்துஸ் சமது,  தமுமுக பொருளாளர் ஓ.யு. ரஹ்மத்துல்லாஹ். தமுமுக மூத்த தலைவர் ஹைதர் அலி, தமுமுக மாநில செயலாளர் பி.எஸ் ஹமீது, தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பாதுஷா, மாவட்ட பொருளாளர் அதிரை அஹமது ஹாஜா ஆகியோர் அதிரை நடுத்தெரு வாய்க்கால் தெருவில் அமைந்துள்ள முஹம்மது ஹாலித் அவர்களின் இல்லத்தில் சந்தித்து அவரது உடல் நலம் குறித்தும், அவர் தற்போது மேற்கொண்டு வரும் சிகிச்சை விவரங்கள் குறித்தும் கனிவுடன் கேட்டறிந்தனர். மேலும் விரைவில் பூரண நலம் பெற்று மீண்டும் சமூக பணியாற்றிட எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துக்கொண்டனர். சந்திப்பின் போது தமுமுக மற்றும் மமக அதிரை பேரூர் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இன்று காலை மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி அவர்கள் முஹம்மது ஹாலித் அவர்களின் இல்லத்தில் சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்தது குறிப்பிடத்தக்கது.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.