இதில் பள்ளி அளவில் பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்கள் பிடித்துள்ள மாணவ மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு, பாராட்டு சான்றிதல், கேடயம் ஆகியன வழங்கி கெளரவிக்கப்பட்டன.
இதில் +2, SSLC தேர்வில் அதிரை அளவில் பரிசுத்தொகை பெற்ற மாணவ, மாணவிகள் நீங்களாக மீதமுள்ள 22 மாணவ மாணவிகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் ரூ 22,000/- பரிசுத்தொகை வழங்கப்பட்டன. பரிசுத்தொகையை இக்பால் M ஸாலிஹ், அப்துல் ஜலீல்( துபாய் ), மான் சேக் ஆகியோர் வழங்கினார்கள்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட திருச்சி அய்மான் மகளிர் கல்லூரி தாளாளர் டாக்டர் எம்.எம் சாகுல்ஹமீது, தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலை கழகம் பதிவாளர் டாக்டர் செ. சுப்பிரமணியன், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பி. சேகர், அண்ணா பல்கலைகழக உறுப்பு பொறியியல் கல்லூரி புல முதல்வர் முனைவர் இளங்கோவன், காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் முனைவர் உதுமான் முகையதீன் ஆகியோர் பரிசினை வழங்கி கெளரவித்தனர்.
CBSE பத்தாம் வகுப்பில் முதல் இடங்களை பிடித்துள்ள
பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி மாணவ, மாணவிகள்:
K. கோபிகா
தந்தை பெயர்: கண்ணன்
Score: 9.2/10
S. பிரகதீஸ்வரி
தந்தை பெயர்:ஸ்ரீ ராமலு
Score: 9/10
M.முத்து கலாநிதி
தந்தை பெயர்:முனியசாமி
Score: 9/10
S. ஷிவ்ராஜ்
தந்தை பெயர்: சசிகாந்த்
Score: 9/10
லாரல் 10/10 சிபிஎஸ் 4 நபர்கள் எடுத்துள்ளார்கல்
ReplyDelete