.

Pages

Monday, June 6, 2016

சிறந்த கவிஞர் விருது பெற்ற 'கவியன்பன்' கலாம் !

அதிராம்பட்டினம், ஜூன் 06
அதிரை சுற்றுவட்டார பகுதியின் பல்வேறு துறைகளை சார்ந்த சாதனையாளர்கள் இனங்காணப்பட்டு அவர்களின் பணிகளை ஊக்கப்படுத்தும் விதமாக 'அதிரை நியூஸ் கல்வி - சாதனையாளர்கள் விருது 2016' வழங்கும் விழா 03-06-2016 வெள்ளிக்கிழமை மாலை அதிரை பேருந்து நிலையம் அருகே உள்ள சாரா திருமண மஹாலில் நடைபெற்றது.

விழாவில் அதிராம்பட்டினம் கவிஞர் கவியன்பன் கலாம் அவர்களுக்கு சிறந்த கவிஞருக்கான விருது வழங்கப்பட்டது. சிறந்த கவிஞர் விருதினை திருச்சி அய்மான் மகளிர் கல்லூரி தாளாளர் முனைவர் எம்.எம் சாகுல் ஹமீது அவர்கள் கவியன்பன் கலாம் அவர்களின் புதல்வர் தாரிக் அவர்களிடம் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

“கலாமின் கவிதைகள்” என்னும் பெயரில் இணையதளம் துவங்கி, அதில் பல்வேறு தலைப்புகளில் 200 க்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதியுள்ளார். இலங்கையில் இயங்கும் பன்னாட்டு இலக்கிய அமைப்பான “தடாகம் கலை , இலக்கிய அமைப்பு” நடத்திய உலகளாவியக் கவிதைப் போட்டியில் முதற்பரிசு மற்றும் “கவியருவி” என்னும் பட்டமும் பெற்றுள்ளார். அமீரகத்திலிருந்து வெளியாகும் “தினத்தந்தி “ நாளிதழில் வெள்ளி தோறும் என் கவிதைகள் வெளியாகின்றன.

துபையில் இயங்கும் வானலை வளர்தமிழ் மற்றும் இலக்கிய அமைப்புகள் நடத்தும் கவியரங்குகளில் கவியரங்கத் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார். மேலும் முகநூல் வழியாக , கவிதை கற்றுகொள்ள விரும்புவோர்க்கு: ஹைக்கூ (துளிப்பா), புதுக்கவிதை, மரபுப்பா இலக்கணம்/விதிகளைப் பயிற்று வருகிறார்.  இவரது கவிதைகள் அதிரை நியூஸ், அதிரை நிருபர், உள்ளிட்ட இணையதளங்களில் வெளியாகி இருக்கின்றன. இவர் எழுதிய கவிதைகள் அனைத்தையும் தொகுத்து கலாமின் பேசும் கவிதைகள்” என்று தலைப்பிட்டு வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். 

1 comment:

  1. என்னை “சிறந்த கவிஞர்” என்று தெரிவு செய்த குழுவினர்க்கும், கேடயம், பதக்கம், சான்றிதழ் வழங்கிய அதிரை நியூஸ் நிர்வாகி தம்பி நிஜாம் அவர்கட்கும் என் உளம்நிறைவான நன்றிகள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.