.

Pages

Friday, July 29, 2016

பட்டுக்கோட்டையில் மின்சாரம் தாக்கி வலது கையை இழந்த பள்ளிச் சிறுவனுக்கு ரூ 65 ஆயிரம் மருத்துவ உதவி !

பட்டுக்கோட்டை, ஜூலை 29
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, நேரு நகர், பூக்கொல்லையில் வசிப்பவர் ஷேக் அப்துல்லா. கஷாப் கடையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கமருன் நிஷா. இவர்களுக்கு மகன்கள் முஹம்மது ரியாஸ் ( வயது 14 ), முஹம்மது ஆசிப் ( வயது 11 ), மகள் நபிலா ( வயது 6 ) உள்ளனர். இவர்கள் 3 பேரும் பட்டுக்கோட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் முறையே 9 ம், 6 ம், 1 ம் ஆகிய வகுப்புகளில் கல்வி பயின்று வருகிறார்கள். மிகவும் ஏழ்மையான நிலையில் வாடகை வீட்டில் குடும்பம் நடத்தி வந்தார்.

இந்த நிலையில் இரண்டாவது மகன் முஹம்மது ஆஷிப் கடந்த மே 1 ந் தேதி வீட்டின் மாடியில் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது வீட்டை ஒட்டி சென்றுகொண்டிருந்த மின் கம்பியில் இவரது வலது கை பட்டுள்ளது. இவரது உடலில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் இவரது வலது கை முற்றிலும் செயல் இழந்தது. மேலும் முதுகு, வயிறு, தொடை பகுதி முழுவதும் பலத்த காயங்களுடன் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்களால் சிறுவனின் வலது கை முழுமையாக அகற்றப்பட்டு 2 மாதங்கள் வரை தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது.

மின்சாரம் தாக்கி பாதிப்புக்கு உள்ளான சிறுவன் குடும்பத்தினரின் ஏழ்மை நிலை குறித்து முத்துப்பேட்டை 'சமூக ஆர்வலர்' சூனா இனா கே.எஸ்.எச் சுல்தான் இப்ராஹிம், சமூக வலைத்தளத்தில் பதிந்து இருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த முஹம்மது முகைதீன் மகன் அப்துல் மாலிக், சிறுவனின் மருத்துவ சிகிச்சைக்கு உதவ முன்வந்தார். தான் பணியாற்றி வரும் துபாய் நாட்டில் உள்ள பல நண்பர்களிடம் சிறுவனின் மருத்துவ சிகிச்சைக்கு நிதி திரட்டினார். இதில் அதிராம்பட்டினம், மேலத்தெரு பகுதியை சேர்ந்த நண்பர்கள் ரூ 65,100/- மருத்துவ நிதி வழங்கினார்கள்.

மருத்துவ நிதியை அதிராம்பட்டினம் மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கம் நிர்வாகிகளுக்கு அனுப்பி சிறுவனிடம் வழங்க கேட்டுக்கொண்டார். இதையடுத்து சங்கத் தலைவர் எம்.எம்.எஸ் சேக் நசுருதீன், துணைத் தலைவர் பி.எம்.கே தாஜுதீன், காதர் சுல்தான் ஆகியோர் மருத்துவ சிகிச்சை எடுத்துவரும் சிறுவனை பட்டுக்கோட்டையில் உள்ள சிறுவனின் இல்லத்தில் இன்று மாலை நேரில் சந்தித்து ரூ 65,100/- நிதியை வழங்கினார்கள். மேலும் துயரில் வாடும் சிறுவனின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்கள். சிறுவன் விரைவில் பூரண நலம் பெற பிரார்த்தனை செய்தனர். அருகில் பட்டுக்கோட்டை பல் மருத்துவர் டாக்டர் இலியாஸ், சுல்தான் இப்ராஹீம், பாரி ஹாஜியார், அப்துல் மஜீது ஆகியோர் உடன் இருந்தனர். மருத்துவ உதவியை பெற்றுக்கொண்ட சிறுவனின் தாய் கமருன் நிஷா நிதி உதவி வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும், நிதி திரட்டி அனுப்பிய அப்துல் மாலிக் மற்றும் நிதியை நேரில் வழங்கிய அதிராம்பட்டினம் மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.