அதிராம்பட்டினம், ஜூலை 22
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் இளைஞர்கள் கால்பந்துக் கழகம் 22 ஆம் ஆண்டு, S.S.M குல் முஹம்மது அவர்களின் நினைவு 16 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி கடந்த [ 07-07-2016 ] அன்று முதல் கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த தலை சிறந்த அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. நேற்று [ 21-07-2016 ] மாலை நடந்த குவாட்டர் ஃபைனல் ஆட்டத்தில் பட்டுக்கோட்டை அணியினரும், தஞ்சாவூர் நேதாஜி அணியினரும் மோதினார்கள். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் தஞ்சாவூர் நேதாஜி அணி வெற்றி பெற்றது.
ஆட்ட அம்பயர்களாக சத்தியமூர்த்தி, ராஜா ஆகியோரும், லயன் அம்பயர்களாக அப்பாஸ், சைபுதீன் ஆகியோர் பணியாற்றினர். நிகழ்ச்சிகள் அனைத்தையும் முஹம்மது இப்ராஹீம், அதிரை மைதீன் ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.
வழமை போல் ஆட்டத்தை காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள், பொதுமக்கள் மைதானத்திற்கு திரளாக வருகை தந்து ரசித்தனர்.
இன்று [ 22-07-2016 ] இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் ஆட்டத்தில் எஸ்எஸ்எம்ஜி அதிரை அணியினரும், கரம்பயம் அணியும் மோத உள்ளனர். இரண்டாவது ஆட்டத்தில் காரைக்குடி, அத்திக்கடை அணிகள் மோத உள்ளனர். ஆட்டங்கள் சரியாக மாலை 4.30 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் இளைஞர்கள் கால்பந்துக் கழகம் 22 ஆம் ஆண்டு, S.S.M குல் முஹம்மது அவர்களின் நினைவு 16 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி கடந்த [ 07-07-2016 ] அன்று முதல் கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த தலை சிறந்த அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. நேற்று [ 21-07-2016 ] மாலை நடந்த குவாட்டர் ஃபைனல் ஆட்டத்தில் பட்டுக்கோட்டை அணியினரும், தஞ்சாவூர் நேதாஜி அணியினரும் மோதினார்கள். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் தஞ்சாவூர் நேதாஜி அணி வெற்றி பெற்றது.
ஆட்ட அம்பயர்களாக சத்தியமூர்த்தி, ராஜா ஆகியோரும், லயன் அம்பயர்களாக அப்பாஸ், சைபுதீன் ஆகியோர் பணியாற்றினர். நிகழ்ச்சிகள் அனைத்தையும் முஹம்மது இப்ராஹீம், அதிரை மைதீன் ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.
வழமை போல் ஆட்டத்தை காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள், பொதுமக்கள் மைதானத்திற்கு திரளாக வருகை தந்து ரசித்தனர்.
இன்று [ 22-07-2016 ] இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் ஆட்டத்தில் எஸ்எஸ்எம்ஜி அதிரை அணியினரும், கரம்பயம் அணியும் மோத உள்ளனர். இரண்டாவது ஆட்டத்தில் காரைக்குடி, அத்திக்கடை அணிகள் மோத உள்ளனர். ஆட்டங்கள் சரியாக மாலை 4.30 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.