.

Pages

Saturday, July 16, 2016

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக்கூட்டம் !

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 36 வது மாதாந்திர கூட்டம் கடந்த 15/07/2016 அன்று ஹாராவில் இனிதே நடைபெற்றது.

நிகழ்ச்சி நிரல்:- 
கிராத்                    : சகோ. M. அன்வர்தீன் ( உறுப்பினர் )
முன்னிலை         : சகோ. S.சரபுதீன் ( தலைவர் )
வரவேற்புரை     : சகோ. M.S.M அப்துல் காதர் ( உறுப்பினர் )
சிறப்புரை            : சகோ. A.சாதிக் அகமது ( இணை தலைவர் )
அறிக்கை வாசித்தல்  : சகோ. A.M.அகமது ஜலீல் ( துணை செயலாளர் )
நன்றியுரை    : சகோ. M.அப்துல் மாலிக்  ( இணை செயலாளர் )

தீர்மானங்கள்:
1) அல்ஹம்துலில்லாஹ் இந்த வருடம் நோன்பின் கடந்த வருடத்தை காட்டிலும் இருமடங்கு நிதி உதவி செய்த நல்ல உள்ளம் படைத்த ரியாத் அதிரை வாசிகளுக்கு நன்றி செலுத்தப்பட்டு துஆ செய்யும்படி கேட்டு கொள்ளப்பட்டது.

2) மாதாந்திர சந்தா விஷயமாக பலகாரணங்களினால் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாத பொறுப்புதாரிகள் மற்றும் உறுப்பினர்களிடமிருந்து சந்தா தொகையை அந்தந்த ஏரியா பொறுப்பு தாரிகளிடமோ அல்லது  நண்பர்களிடமோ கொடுத்து அல்லாஹ்வின் பொருத்தத்தை பெற்று கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்பட்டது.

3) வரும் ஹஜ்ஜுப் பெருநாள் குர்பானி திட்டம் ( தனிப்பட்ட முறையில் ஆடு / மாடு / கூட்டு குர்பானி ) விஷயமாக ஆலோசனை செய்து அதற்கான தொகை விஷயத்தை அடுத்த மாதம் அறிவிப்பதோடு வரும் கூட்டத்தில் பெயரை முன்பதிவு செய்யுமாறு கேட்டு கொள்ளப்பட்டது.

4) அதிரையிலுள்ள ஏழை எளிய மக்களின் நலம் கருதி இஹ்லாஸான முறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் (ABM) தலைமையகத்துக்கு முழு ஒத்துழைப்பும் ஆதரவும் தந்து மேலும் சிறந்த முறையில் நடைபெற துஆ செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

 5) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு வரும் AUGUST 12-ம் தேதி  ஹாராவில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டு அதில் அதிரை வாசிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

இப்படிக்கு,
அதிரை பைத்துல்மால், ரியாத் கிளை
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.