சுமார் 60 வருடங்களுக்கு முன் மனிதர்களே வாழ யோசித்த மண் இந்த துபை ஆனால் இன்று உலகெங்கிலுமிருந்து மக்கள் வந்து வாழ்ந்து சுவாசிக்கும் மண்ணாக மாறியது விந்தையே! இந்த பாலைவனத்தில் ஓர் நவீன சோலைவனத்தை காட்டு மிருகங்களுக்கும் உருவாக்கி இன்னும் வளர்வோம் என்ன பந்தயம் என கட்டி நிற்கிறது!
ஆம், வரும் அக்டோபர் மாதம் 2016 முதல் துபாய் அல் வர்கா பகுதியில், சுமார் 1 பில்லியன் திர்ஹம் செலவில், 119 ஹெக்டேர் பரப்பளவில், புதிய தொழிற்நுட்பத்தில் மிருகங்களுக்கான 5 நட்சத்திர வன உயிரியல் பூங்கா 'துபாய் சஃபாரி' எனும் பெயரில் செயல்படவுள்ளது.
10,500 மிருகங்களை பாராமரிக்கும் வசதியுள்ள இதில் ஆரம்பமாக உலகெங்கிங்கிலுமிருந்தும் கொண்டு வரப்படும் சுமார் 5000 மிருகங்கள், பறவையினங்களுடன் துவங்கவுள்ள இந்தப் பூங்காவில் குளிரூட்டப்பட்ட செயற்கை நகரும் பாறைகள் சிங்கம் புலிகளுக்காக, செயற்கை மூடுபனியை உருவாக்கும் பாறைகள் சிறுத்தைகள் கழுதை புலிகளுக்காக, குளிர்நீர் குளங்கள் நீர்யானை, காட்டெருமை, மான் இனங்களுக்காக, சாரல் நீர் வழியும் மிருகங்களின் தங்குமிடங்கள் என பார்த்துப் பார்த்து உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் பூங்காவை சுற்றிப்பார்க்க சுமார் 8 மணிநேரமாகும் என்பதால் இங்கேயே மிருகங்களின் நடமாட்டங்களை நேரில் ரசித்தவாறு சாப்பிட 4 உணவகங்கள், குறைந்தது 2 நாட்களாவது பூங்காவினுள்ளேயே தங்கி இளைப்பாறி செல்ல ஏதுவாய் நட்சத்திர ஹோட்டல்கள், பூங்காவிற்கு தேவையான ஒரு பகுதி மின்சாரத்தை தயாரித்துக் கொள்ள சோலார் பேனல்கள் அதன் கீழேயே கார் பார்க்கிங் வசதிகள், 1000 சீட் வசதியுள்ள தியேட்டரில் மிருகங்களை பற்றியும் 300 சீட் வசதியுள்ள இன்னொரு தியேட்டரில் பறவைகள் குறித்தும் கல்விசார் படங்கள் காணும் வசதி, தண்ணீரில் வாழும் மிருகங்களை தண்ணீருக்குள்ளேயே சென்று காணும் வசதி, துபாயின் தட்பவெப்ப சூழ்நிலைக்கேற்ப மாற்றப்படும் பூங்காவின் வேலைநெரங்கள், பல்வேறு மிருகங்களையும் நடந்தே இயற்கையாய் காணும் வசதி என அனைத்து மிருகங்களும் அதனதன் இயற்கை சூழலை உணரும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.
துபாய் சஃபாரி இன்னுமோர் மணிமகுடம்.
Source: 7 days
தமிழில் நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.