.

Pages

Monday, July 18, 2016

துபாய் போலீஸாரின் மனிதநேயம் !

துபாய், ஜூலை 18
துபாய் நாட்டிற்கு சுற்றுலா வந்த சீனா பயணி ஒருவர் விமான நிலையத்திலிருந்து நேராக தங்கும் விடுதிக்கு சென்றுள்ளார். அங்கு சில மணி நேர ஒய்வுக்கு பின் அருகில் உள்ள இடங்களை காண தனியாக சென்றுள்ளார். பின்னர் மீண்டும் தங்கும் விடுதிக்கு செல்லும் பாதை மறந்து விடவே. அங்கு விழி பிதுங்கி பரிதவித்து நின்றவருக்கு துபாய் போலீஸ் உதவ முன்வந்தது. இவரிடம் எங்கு தங்கி இருக்கிறிர்கள் ? உங்களது தங்கும் விடுதியின் பெயர் என்ன எனக் கேட்டனர். இவரால் தான் தங்கி இருக்கும் இடத்தின் சரியான முகவரியை கூற முடியவில்லை. உடனே இவரது விசாவை பார்வையிட்டவர்கள் அதில் உள்ள ஸ்பான்சர் விவரங்களை பெற்று சரியான முகவரியை கண்டறிந்தனர். பின்னர் சீனப் பயணியை அவர் தங்கிருக்கும் விடுதிக்கு பத்திரமாக அனுப்பி வைத்தனர். இக்கட்டான நேரத்தில் தானாக முன்வந்து உதவிய துபாய் போலீஸாரின் மனித நேயப்பணியை சீனப் பயணி மெய் சிலிர்க்க பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

இதே போல் துபாயில் கடந்த 2015 ஆண்டு ஜூன் மாதத்தில் நிகழ்ந்த மற்றொரு மனிதநேயப் பணி பலரை நெகிழ வைத்தது...
துபாய் நாட்டில் டிரக் வாகனம் ஒட்டி வருபவர் முஹம்மது மசூத். இவர் வாகனம் நெருக்கடி மிகுந்த பகுதியில் தனது டிரக் வாகனத்தை ஓட்டிச்சென்றுள்ளார். அப்பொழுது வாகனத்தில் திடீர் பழுது ஏற்பட்டு நகர முடியாமல் சாலையில் சிக்கி நின்றது. வாகன ஓட்டுனர் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்த போது இதே சாலையில் ரோந்தில் ஈடுபட்ட துபாய் போலீஸ் ஒருவர் நகர முடியாமல் சாலையில் நின்றுகொண்டிருந்த வாகனத்திற்கு உதவ முன்வந்தார்.

பின்னர் வாகனத்தின் பின்புறமாக சென்று தனது முழு பலத்தையும் வெளிப்படுத்தி வாகனத்தை தனது இரு கரங்களால் தள்ளி அப்புறப்படுத்த உதவினார். இதன் பிறகு வாகனம் நெருக்கடியான பகுதியிலிருந்து பார்க்கிங் பகுதிக்கு நகர்ந்து சென்றது. இக்கட்டான நேரத்தில் தானாக முன்வந்து உதவும் துபாய் போலீஸாரின் மனிதநேயப் பணியை டிரக் வாகன ஓட்டுனர் மற்றும் இதே சாலையில் பயணித்த பலர் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

செய்தி தொகுப்பு: அதிரை நியூஸ்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.