.

Pages

Thursday, July 21, 2016

அதிரையில் நடந்த நேர்முகத்தேர்வு சிறப்பு பயிற்சி முகாமில் பட்டதாரி இளைஞர்கள்-மாணவர்கள் பங்கேற்பு !

அதிராம்பட்டினம், ஜூலை 21
படித்த பட்டதாரி இளைஞர்கள் நேர்முகத்தேர்வில் 100 சதவீதம் வெற்றி பெற நேர்முகத்தேர்வு விழிப்புணர்வு பயிற்சி முகாம் மாணவர் இந்தியா அமைப்பு அதிரை கிளை சார்பில் இன்று இரவு அதிராம்பட்டினம், நடுத்தெரு பைத்துல்மால் அருகில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாணவர் இந்தியா அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சேக் அப்துல் காதர் தலைமை வகித்தார். தமுமுக அதிராம்பட்டினம் செயலாளர் ஏ.ஆர் சாதிக் பாட்சா, பொருளாளர் செய்யது முஹம்மது புகாரி, நியாஸ் அஹமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அமீரகம் பன்னாட்டு நிறுவனத்தில் தலைமை நிதி அதிகாரியாக பணியாற்றி வரும் அப்துல் ஹாதி MBA, M.Com., (ACCA) அவர்கள் கலந்துகொண்டு வேலை வாய்ப்பை எதிர்நோக்கி உள்ள பட்டதாரி இளைஞர்கள், கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு எடுத்து உரை நிகழ்த்தினார். இதில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் வேலைவாய்ப்பின் நேர்முகத்தேர்வின் போது எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து எடுத்துரைத்தார்.

முன்னதாக தமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அதிரை அஹமது ஹாஜா வரவேற்றார். முடிவில் மாணவர் இந்தியா அமைப்பின் அதிராம்பட்டினம் செயலாளர் நூர் முஹம்மது நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் அதிரை மற்றும் சுற்றுப்புற பகுதி வணிகவியல், வணிக ஆட்சியல் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள், பட்டதாரி இளைஞர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். அனைவருக்கும் குறிப்பேடுகள், பேனா உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாட்டினை மாணவர் இந்தியா அமைப்பின் அதிராம்பட்டினம் கிளை பொறுப்பாளர்கள் செய்து இருந்தனர்.

 

1 comment:

  1. இதே போல் நிறைய முகாம்கள் நடத்தப்பட வேண்டும். ஆக்கபூர்வமான முயற்சி பாராட்டுக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.