அதிராம்பட்டினம், ஜூலை 26
அதிராம்பட்டினத்தில் கொட்டும் மழையில் கடைகளின் பூட்டை உடைத்து ரூ 74 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது. மற்றொரு கடையில் கொள்ளை முயற்சி நடந்தது.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை சாலையில் மளிகை கடை நடத்தி வருபவர் அப்துல் ரஹ்மான். நேற்றிரவு 10 மணியளவில் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். அப்போது கனமழை பெய்து கொண்டிருந்ததால் கடையிலிருந்த பணத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்லாமல் கல்லாவிலேயே வைத்துச் சென்றுவிட்டார். நள்ளிரவில் கன மழை பெய்து கொண்டிருந்த போது இவரது கடையில் பூட்டை கடப்பாரையால் உடைத்த திருடர்கள், கல்லாவில் இருந்த ரூ 60 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.
இதே போல் இந்த கடையின் அருகில் அதிராம்பட்டினத்தை சேர்ந்த அப்துல் ஜப்பார் என்பவர் நடத்திவந்த குழந்தைகளுக்கான பொருட்கள் விற்கும் கடையின் பூட்டை உடைத்து கல்லாவில் இருந்த ரூ 14 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்
பின்னர் அதிராம்பட்டினம் காவல் நிலையம் அருகில் மோகன்லால் என்பவர் நடத்தி வந்த எலெட்ரிக்கல் கடை பூட்டையும் உடைத்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்தனர். ஆனால் அங்கு பணம் ஏதும் சிக்கவில்லை. இன்று காலை கடை திறக்க வந்தவர்கள், கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிராம்பட்டினத்தில் ஒரே நேரத்தில் 3 கடைகளில் கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிராம்பட்டினத்தில் கொட்டும் மழையில் கடைகளின் பூட்டை உடைத்து ரூ 74 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது. மற்றொரு கடையில் கொள்ளை முயற்சி நடந்தது.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை சாலையில் மளிகை கடை நடத்தி வருபவர் அப்துல் ரஹ்மான். நேற்றிரவு 10 மணியளவில் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். அப்போது கனமழை பெய்து கொண்டிருந்ததால் கடையிலிருந்த பணத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்லாமல் கல்லாவிலேயே வைத்துச் சென்றுவிட்டார். நள்ளிரவில் கன மழை பெய்து கொண்டிருந்த போது இவரது கடையில் பூட்டை கடப்பாரையால் உடைத்த திருடர்கள், கல்லாவில் இருந்த ரூ 60 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.
இதே போல் இந்த கடையின் அருகில் அதிராம்பட்டினத்தை சேர்ந்த அப்துல் ஜப்பார் என்பவர் நடத்திவந்த குழந்தைகளுக்கான பொருட்கள் விற்கும் கடையின் பூட்டை உடைத்து கல்லாவில் இருந்த ரூ 14 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்
பின்னர் அதிராம்பட்டினம் காவல் நிலையம் அருகில் மோகன்லால் என்பவர் நடத்தி வந்த எலெட்ரிக்கல் கடை பூட்டையும் உடைத்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்தனர். ஆனால் அங்கு பணம் ஏதும் சிக்கவில்லை. இன்று காலை கடை திறக்க வந்தவர்கள், கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிராம்பட்டினத்தில் ஒரே நேரத்தில் 3 கடைகளில் கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.