.

Pages

Sunday, July 17, 2016

பட்டுக்கோட்டையில் வாலிபர் மீது தலையில் கல்லை போட்டு கொலை !

பட்டுக்கோட்டை, ஜூலை 17
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நேரு நகரை சேர்ந்தவர் நைனா முஹம்மது ( வயது 35 ). இவர் மீது நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இரவு நேரு நகர் பூக்கொல்லையிலிருந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்பொழுது வாகனத்தை இடைமறித்த மர்ம கும்பல் இவரை தாக்கி கீழே தள்ளிவிட்டு அருகில் கிடந்த பெரிய கல்லை தலையில் போட்டு கொலை செய்தனராம். இதில் நைனா முஹம்மது சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்.

தகவலறிந்த பட்டுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரதத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய மர்ம கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.