.

Pages

Sunday, July 17, 2016

CBD சார்பில் அதிரை ஈசிஆர் சாலையில் இருபுறமும் குவிந்து கிடந்த மணல் அப்புறப்படுத்தும் பணி: அதிரை சேர்மன் தொடங்கி வைத்தார் !

அதிராம்பட்டினம், ஜூலை 17
தமிழகம் முழுவதும் கிரஸண்ட் ப்ளட் டோனர்ஸ் ( CBD ) அமைப்பின் சார்பில் 'விபத்தில்லா தேசம் உருவாக்குவோம்' என்ற பெயர்ளில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மத்தியில் விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் கிரஸண்ட் ப்ளட் டோனர்ஸ் ( CBD ) அமைப்பின் சார்பில் அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலையின் இருபுறமும் குவிந்து கிடந்த மணலை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கிரஸண்ட் ப்ளட் டோனர்ஸ் அதிராம்பட்டினம் கிளைத் தலைவர் இப்ராஹீம் அலி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அதிராம்பட்டினம் பேரூராட்சிமன்ற பெருந்தலைவர் எஸ்.எச் அஸ்லம் கொடியசைத்து பணியை தொடங்கி வைத்தார்.

இதில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் முதல், காதிர் முகைதீன் கல்லூரி வரையிலான ஈசிஆர் சாலையின் இருபுறங்களிலும் குவிந்து கிடந்த மணல் முழுவதும் அப்புறப்படுத்தப்பட்டன.

முன்னதாக கிரஸண்ட் ப்ளட் டோனர்ஸ் தஞ்சை மாவட்ட தலைவர் பேராசிரியர் செய்யது அஹமது கபீர் வரவேற்றார். நிகழ்ச்சி முடிவில் கிரஸண்ட் ப்ளட் டோனர்ஸ் மாவட்ட பொருளாளர் முஹம்மது சாலிகு நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கப் பொறுப்பாளர்கள் இர்பான் சேக், முத்துகிருஷ்ணன், பேராசிரியர் பிரேம் நவாஸ் மற்றும் கிரஸண்ட் ப்ளட் டோனர்ஸ் அதிராம்பட்டனம் கிளைப் பொறுப்பாளர்கள் ஹாஜா முகைதீன், ஹசன் உள்ளிட்ட கிரஸண்ட் ப்ளட் டோனர்ஸ் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
 

2 comments:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.