துபாயில் சாலை மற்றும் போக்குவரத்துத்துறையின் (RTA) கீழ் இயங்கும் பேருந்துகள், மெட்ரோ ரயில்கள், தண்ணீரில் செல்லும் பேருந்து வகை படகுகள் (Water Buses), டேக்ஸிகள், வாகன நிறுத்தம் (Vehicle Parking) என அனைத்திற்கும் ஓரே நோல் கார்டுகள் (NOL Cards) மூலம் கட்டணம் செலுத்தும் வசதி நடைமுறையிலுள்ளது. இது மேலும் பல்வேறு சேவைகளுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்றும் நோல் அட்டைகள் வரும்காலத்தில் மின்-பணப்பையாக (e-wallet) மாற்றத்தக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது நோல் கார்டுகளை கொண்டு பூங்கா (Parks) மற்றும் அருங்காட்சியக (Museum) அனுமதி சீட்டுக்களை பெறவும், வாகனங்களுக்கு உள்ளது போல் ஒவ்வொருவருக்கும் தனித்தனி நோல் அட்டைகள் என்றில்லாமல் ஒரே அட்டையை கொண்டு எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் கட்டணம் செலுத்தலாம் என்றும் ஆனால் அதற்குத் தேவையான முன்பணம் நிரப்பப்பட்டிருக்க (Prepaid) வேண்டும் எனவும் துபை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதற்கான சிறப்பு நுழைவு வாயில்கள் (Smart Gates) ஏற்படுத்தப்படும்.
மேலும், சுமார்ட் துபை (Smart Dubai) திட்டத்தின் அடிப்படையில் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டிற்குள் அனைத்து மின்-சேவை (e-services) திட்டங்களும் மொபைல் சேவை (Smart Services) திட்டங்களாக மாற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடைமுறையிலுள்ள 351 மின்-சேவைகளில் 204 சேவைகள் மொபைல் சேவைகளாக மாற்றப்பட்டுள்ளதும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
தற்போது நோல் கார்டுகளை கொண்டு பூங்கா (Parks) மற்றும் அருங்காட்சியக (Museum) அனுமதி சீட்டுக்களை பெறவும், வாகனங்களுக்கு உள்ளது போல் ஒவ்வொருவருக்கும் தனித்தனி நோல் அட்டைகள் என்றில்லாமல் ஒரே அட்டையை கொண்டு எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் கட்டணம் செலுத்தலாம் என்றும் ஆனால் அதற்குத் தேவையான முன்பணம் நிரப்பப்பட்டிருக்க (Prepaid) வேண்டும் எனவும் துபை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதற்கான சிறப்பு நுழைவு வாயில்கள் (Smart Gates) ஏற்படுத்தப்படும்.
மேலும், சுமார்ட் துபை (Smart Dubai) திட்டத்தின் அடிப்படையில் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டிற்குள் அனைத்து மின்-சேவை (e-services) திட்டங்களும் மொபைல் சேவை (Smart Services) திட்டங்களாக மாற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடைமுறையிலுள்ள 351 மின்-சேவைகளில் 204 சேவைகள் மொபைல் சேவைகளாக மாற்றப்பட்டுள்ளதும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.