.

Pages

Saturday, July 30, 2016

அதிரையில் நாளை இறுதி ஆட்டம்: அனைவரும் பங்கேற்க அழைப்பு !

அதிராம்பட்டினம், ஜூலை 30
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் இளைஞர்கள் கால்பந்துக் கழகம் 22 ஆம் ஆண்டு, S.S.M குல் முஹம்மது அவர்களின் நினைவு 16 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி கடந்த [ 07-07-2016 ] அன்று முதல் கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நேற்று நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் அதிரை எஸ்எஸ்எம்ஜி அணியோடு இராமநாதபுரம் மாவட்டம் பள்ளத்தூர் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் இரு அணிகளும் 2-2 என்ற கோல் போட்டு சமநிலையில் இருந்தனர். பின்னர் இரு அணிகளுக்கும் டிரை ப்ரேக்கர் வாய்ப்பு வழங்கப்பட்டது. இறுதியில் பள்ளத்தூர் அணி வெற்றி பெற்று இறுதி போட்டியில் விளையாட தகுதி பெற்றது.

நாளை ( 31-07-2016 ) நடைபெற உள்ள இறுதி ஆட்டத்தில் கண்டனூர் அணியோடு இராமநாதபுரம் மாவட்டம் பள்ளத்தூர் அணி மோத உள்ளது. ஆட்ட முடிவில் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்துகொள்ள உள்ளனர்.  தொடர் போட்டியில் வின்னர் மற்றும் ரன்னர் அணிகள், தொடர் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்கள் உள்ளிட்டோருக்கு சிறப்பு பரிசுகள், கேடயம் வழங்கி கெளரவிக்கப்பட உள்ளது.

இறுதி போட்டியில் அனைவரும் தவறாது கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கால்பந்தாட்ட நிர்வாக கமிட்டி சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

செய்தி மற்றும் படங்கள்:
என். முஹம்மது ரபீக்
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.