.

Pages

Sunday, July 31, 2016

கரண்ட் மட்டுமல்ல கரண்ட் பில்லும் ஷாக்கடிக்கும் - இது மஹாராஷ்டிரா கூத்து

கி.மு.5000 ஆம் ஆண்டைச் சேர்ந்த அறிவாளிகள் ஆட்சி செய்யும் மஹாராஷ்டிரா மாநிலத்தின் பன்வேல் தாலுகா, வத்கார் கிராமத்தை சேர்ந்த சமூக சேவகரும் கட்டிடத் தொழிலாளியுமான தாஹிர் அலி ஜூபைர் கான் என்னும் எளியவருக்கு 5.53 லட்சம் மின்சாரக் கட்டணம் கட்டச் சொல்லி 'ஓலை' வர மனிதன் மின்சாரம் தாக்கியவரைப் போல் 'வெரண்டு' போய் உள்ளார்.

கடந்த 30 வருடங்களாக தனது மனைவி ஜரீனா கான் மற்றும் பிள்ளைகளுடன் அங்கு வாழும் தாஹிர் அலி கான் மாதந்தோறும் சுமார் 500 முதல் 1500 ரூபாய் வரை மின் கட்டணம் செலுத்தி வருபவர். இந்நிலையில் 5.53 லட்சம் செலுத்த சொல்லும் பில்லை தூக்கிக் கொண்டு மஹாராஷ்டிரா மின்சார வாரியத்திற்கு (MSEB) ஓட, அவர்கள் 2.02 லட்சம் கட்டச் சொல்லி தள்ளுபடி சலுகை வழங்கியுள்ளனர்.

நொந்து போன கான், இது என்ன என் வீட்டிற்கான கட்டணமா? அல்லது என் கிராமத்திற்கான மின் கட்டணமா? எனக் கேட்டு நீதிமன்றத்தை அணுகியுள்ளார். ஆனால் கடமை வீரர்களான மஹாராஷ்டிர மின்வாரிய அதிகாரிகள் பணத்தை கட்டினால் தான் மீண்டும் மின் இணைப்பு தரப்படும் என ப்யூசை பிடிங்கிச் சென்றுள்ளனர், இதில் 100 யூனிட் ஒட வேண்டிய மீட்டரில் 700 முதல் 1000 யூனிட் வரை தவறுதலாக ஒடுகிறது என வியாக்கியானம் வேறு.

அட அப்பரன்டிசுகளா! ப்யூச புடுங்கிற வேகத்த உங்க பாஷாயில தவறாக ஓடும் மீட்டர சரி செய்றதுல காட்டியிருக்கலாமேடா!

Source: Mid Day
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.