.

Pages

Tuesday, September 15, 2015

அதிரை ஈசிஆர் சாலையில் முட்புதர்களை அகற்றும் பணியில் கல்லூரி மாணவர்கள் !

காதிர் முகைதீன் கல்லூரி லியோ கிளப் மாணவர்கள் சார்பில் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் அதிரை ஈசிஆர் சாலையின் இருபுறங்களிலும் அதிகளவில் படர்ந்துள்ள முட்புதர்களை அகற்றும் பணி நடைபெற்றது.

சாலையின் இருபுறங்களிலும் மண்டிகாணப்படும் முட்புதர்களை அகற்றும் பணியை கல்லூரி முதல்வர் முனைவர் ஏ. ஜலால் துவக்கி வைத்தார். கல்லூரி துணை முதல்வர் முனைவர் ஏ.எம் உதுமான் முகைதீன், லியோ ஆலோசகர் முனைவர் மேஜர் எஸ்.பி கணபதி, கணினி அறிவியல் துறை தலைவர் என். ஜெயவீரன், உடற்கல்வி இயக்குனர் முருகானந்தம், அலுவலக கண்காணிப்பாளர் எஸ். ரவிசந்திரன், லியோ மாவட்ட தலைவர் விக்னேஷ், லியோ சங்க தலைவர் சதிஸ்குமார் மற்றும் கல்லூரி லியோ மாணவர்கள் கலந்துகொண்டு முட்புதர்களை அகற்றினார்கள்.

இவர்களின் சமூக பணியை பாராட்டி இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் - வர்த்தகர்கள் நன்றி தெரிவித்தனர்.

செய்தி மற்றும் படங்கள்:
அஃப்ரித் ( மாணவ செய்தியாளர் )
 
 
 
 
 
 

1 comment:

  1. ஆசிரியர் என்பவர் மானவர்களுக்கு முன் மாதிரியாக இருபவர்தான் இப்படி வெட்டி விளம்பரம் தேடுபவர் அல்ல.போடோக்கு போஸ் குடுக்க மானவர்களின் உழைப்பு தான் கிடைததா......?(அந்த போட்டோக்களுக்குஃப் பின் நடந்ததை நான் அறிவேன்)

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.