.

Pages

Monday, June 6, 2016

பேச இயலாத – காது கேளாதோர் சமூக நல அறக்கட்டளைக்கு சிறந்த சேவை அமைப்பு விருது !

அதிராம்பட்டினம், ஜூன் 06
அதிரை சுற்றுவட்டார பகுதியின் பல்வேறு துறைகளை சார்ந்த சாதனையாளர்கள் இனங்காணப்பட்டு அவர்களின் பணிகளை ஊக்கப்படுத்தும் விதமாக 'அதிரை நியூஸ் கல்வி - சாதனையாளர்கள் விருது 2016' வழங்கும் விழா நேற்று முன்தினம் அதிரை பேருந்து நிலையம் அருகே உள்ள சாரா திருமண மஹாலில் நடைபெற்றது.

அதிராம்பட்டினம் மாற்றுத்திறனாளிகள் பேச இயலாத – காது  கேளாதோர் சமூக நல அறக்கட்டளை அமைப்பிற்கு  சிறந்த சேவை அமைப்பு விருது வழங்கப்பட்டது. விருதினை விருதினை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் வழங்கி பாராட்டு தெரிவித்தார். விருதினை பேச இயலாத – காது கேளாதோர் சமூக நல அறக்கட்டளை பொறுப்பாளர்கள் சாகுல் ஹமீது, சிராஜுதீன், ஜெஹபர் சாதிக், ஹாஜா செரிப், உமர் தம்பி ஆகியோர் இணைந்து பெற்றனர்.

அதிராம்பட்டினத்தில் வாழும் பேச இயலாத – காது  கேளாதோர் இணைந்து சமூக நல அறக்கட்டளை துவக்கி கடந்த 6 ஆண்டுகளாக சிறப்பாக நடத்தி வருகின்றனர். இதில் மாதாந்தோறும் கூட்டங்கள் நடத்தி உறுப்பினர்களின் கோரிக்கைகள் கேட்டறிவது. அரசின் உதவிகளை பெற்றக்கொடுப்பது. ஏழை உறுப்பினர்களுக்கு கடனுதவி அளிப்பது. பண்டிகை காலங்களில் உறுப்பினர்களுக்கு வேஷ்டி, கைலிகள் வழங்குவது. ஆண்டுதோறும் ஆண்டு விழா கூட்டங்கள் நடத்தி உறுப்பினர்களின் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு எடுத்துச்செல்வது, ஆண்டு தோறும் மதநல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி நடத்துவது உள்ளிட்ட பணிகளை சிறப்பாக நடத்தி வருகின்றனர்.  

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.