.

Pages

Monday, June 6, 2016

அதிரை பைத்துல்மால் – ரியாத் கிளைக்கு சிறந்த சமூக சேவை அமைப்புக்கான விருது !

அதிராம்பட்டினம், ஜூன் 06
அதிரை சுற்றுவட்டார பகுதியின் பல்வேறு துறைகளை சார்ந்த சாதனையாளர்கள் இனங்காணப்பட்டு அவர்களின் பணிகளை ஊக்கப்படுத்தும் விதமாக 'அதிரை நியூஸ் கல்வி - சாதனையாளர்கள் விருது 2016' வழங்கும் விழா நேற்று முன்தினம் அதிரை பேருந்து நிலையம் அருகே உள்ள சாரா திருமண மஹாலில் நடைபெற்றது.

விழாவில் சிறந்த சமூக சேவை அமைப்புக்கான விருது அதிரை பைத்துல்மால் – ரியாத் கிளைக்கு வழங்கப்பட்டது. விருதினை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் வழங்கி பாராட்டு தெரிவித்தார். விருதினை சவூதி ரியாத் கிளை சார்பில் நிஜாம் முஹம்மது பெற்றார்.

நமது பகுதியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய சமூகத்திற்கு உதவும் நோக்கில் கடந்த 20 ஆண்டுகளாக அதிரையில் செயல்பட்டு வரும் அதிரை பைத்துல்மால் நிறுவனம் வட்டியில்லா கடன்கள் – வாழ்வாதார உதவிகள் – மாதந்திர பென்ஷன் உதவித்திட்டம், கல்வி உதவிகள், நலத்திட்ட உதவிகள் - ஆம்புலன்ஸ் சேவை உள்ளிட்டவற்றை தொய்வில்லாமல் வழங்கி வருகிறது. ரியாத் வாழ் அதிரையர்கள் அதிரை பைத்துல்மாலுடன் இணைந்து பொதுநல சேவையை சிறப்பாக செய்து வருகின்றனர். மாதந்தோறும் கூட்டங்கள் நடத்தி பொதுமக்கள் பயனுறும் வகையில் பல திட்டங்கள் தீட்டுவது. ஏழைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்குவதில் கூடுதல் கவனம் செலுத்தி வருவது, நலிவடைந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக இந்த விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.