.

Pages

Monday, June 6, 2016

சிறந்த 'இரத்த தான சேவை' விருது பெற்ற நிருபர் ஏ. சாகுல் ஹமீது

அதிராம்பட்டினம், ஜூன் 06
அதிரை சுற்றுவட்டார பகுதியின் பல்வேறு துறைகளை சார்ந்த சாதனையாளர்கள் இனங்காணப்பட்டு அவர்களின் பணிகளை ஊக்கப்படுத்தும் விதமாக 'அதிரை நியூஸ் கல்வி - சாதனையாளர்கள் விருது 2016' வழங்கும் விழா நேற்று முன்தினம் அதிரை பேருந்து நிலையம் அருகே உள்ள சாரா திருமண மஹாலில் நடைபெற்றது.

விழாவில் சிறந்த இரத்ததான சேவை  விருது நிருபர் A.சாகுல் ஹமீது அவர்களுக்கு வழங்கப்பட்டது. விருதினை அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் முனைவர் ஏ. உதுமான் முகையதீன் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
  
ஏ. சாகுல் ஹமீது அவர்கள் 'மணிச்சுடர்' பத்திரிகையின் அதிராம்பட்டினம் பகுதி நிருபர்.  கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து இரத்த தானம் செய்து வருகிறார். இதுவரையில் 29 தடவை இரத்தம் வழங்கி மொத்தம் 10 லிட்டர் 150 மில்லி கிராம் இரத்தம் வழங்கி சாதனை புரிந்துள்ளார்.  இவருடைய குருதிக்கொடை சேவையை பாராட்டி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை மாவட்ட ஆட்சியராக இருந்த திரு. பாஸ்கரன் அவர்கள், தஞ்சை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற தேசிய தன்னார்வ இரத்ததான விழாவில் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மேலும் முன்னாள் மத்திய இணை அமைச்சர் இ. அஹமது எம்பி, பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் அப்துல் ரஹ்மான் எம்பி, பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. என்.ஆர். ரெங்கராஜன் எம்எல்ஏ ஆகியோரிடம் பாராட்டுதலை பெற்றுள்ளார். மேலும் இவரது சேவையினை பாராட்டி பல்வேறு தொண்டு நிறுவனங்கள் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி கெளரவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.