.

Pages

Sunday, June 5, 2016

'தமிழ் இலக்கியம்' விருது பெற்ற கவிஞர் மு. முஹம்மது தாஹா !

அதிராம்பட்டினம், ஜூன் 05
அதிரை சுற்றுவட்டார பகுதியின் பல்வேறு துறைகளை சார்ந்த சாதனையாளர்கள் இனங்காணப்பட்டு அவர்களின் பணிகளை ஊக்கப்படுத்தும் விதமாக 'அதிரை நியூஸ் கல்வி - சாதனையாளர்கள் விருது 2016' வழங்கும் விழா நேற்று முன்தினம் அதிரை பேருந்து நிலையம் அருகே உள்ள சாரா திருமண மஹாலில் நடைபெற்றது.

விழாவில் கவிஞர் மு. முஹம்மது தாஹா அவர்களுக்கு தமிழ் இலக்கியம் விருது வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

உயர்நிலைப்பள்ளியின் ஓய்வு பெற்ற முன்னாள் தலைமை ஆசிரியர். தமிழ் மொழி மீது அதிக ஆர்வம் கொண்டவர். இலக்கண, இலக்கியங்களை முறையாக கற்றுக்கொண்டவர். கல்லூரியில் படிக்கும் காலத்தில் கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி, கவிதை போட்டிகளில் கலந்துகொண்டு பல பரிசுகளை பெற்று உள்ளார். இலக்கியம், ஆன்மிகம் மற்றும் சமுதாயம் சார்ந்த பல்வேறு தலைப்புகளில் 100 புத்தகங்கள் எழுதியுள்ளார்.  சமய நல்லிணக்க அடிப்படையில் பல்வேறு ஊர்களில் பல கவியரங்க நிகழ்ச்சிகளில் கவிதை வாசித்துள்ளார். பள்ளிகளில் பல இலக்கிய சொற்பொழிவு ஆற்றியுள்ளார். மேலும் திருச்சி வானொலியில் பலமுறை சொற்பொழிவு ஆற்றியுள்ளார். இவர் எழுதிய பல்வேறு நூல்களை பல்கலைகழக மாணவர்கள் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டங்கள் பெற்றுள்ளனர். இவர் எழுதிய அறிவுத்திரட்டு என்ற நூல் தமிழ் பல்கலைக் கழக நீதி நூல் பிரிவில் இடம்பெற்றுள்ளது. இவர் எழுதிய பல கட்டுரைகள், கவிதைகள் பல்வேறு வார இதழ், மாத இதழ்களில் பிரசுரமாகியுள்ளது. கவிதை செம்மல், சவ்வாது புலவர், தமிழ் இலக்கிய மாமணி, தமிழ் மாமணி உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.

தமிழ் இலக்கியம் விருதினை திருச்சி அய்மான் மகளிர் கல்லூரி தாளாளர் முனைவர் எம்.எம் சாகுல் ஹமீது அவர்கள் கவிஞர் மு. முஹம்மது தாஹா அவர்களிடம் வழங்கி பாராட்டு தெரிவித்தார். 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.