.

Pages

Sunday, June 5, 2016

'சிறந்த பேச்சாளர்' விருது பெற்ற பேராசிரியர் M.A முஹம்மது அப்துல் காதர் !

அதிராம்பட்டினம், ஜூன் 05
அதிரை சுற்றுவட்டார பகுதியின் பல்வேறு துறைகளை சார்ந்த சாதனையாளர்கள் இனங்காணப்பட்டு அவர்களின் பணிகளை ஊக்கப்படுத்தும் விதமாக 'அதிரை நியூஸ் கல்வி - சாதனையாளர்கள் விருது 2016' வழங்கும் விழா நேற்று முன்தினம் அதிரை பேருந்து நிலையம் அருகே உள்ள சாரா திருமண மஹாலில் நடைபெற்றது.

விழாவில் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் M.A முஹம்மது அப்துல் காதர், MA., M.Phil, CJMC., அவர்களுக்கு சிறந்த பேச்சாளர் விருது வழங்கப்பட்டது. சிறந்த பேச்சாளர் விருதினை திருச்சி அய்மான் மகளிர் கல்லூரி தாளாளர் முனைவர் எம்.எம் சாகுல் ஹமீது அவர்கள் பேராசிரியர் M.A முஹம்மது அப்துல் காதர் அவர்களிடம் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியின் முன்னாள் முதல்வர். பள்ளி மாணவப் பருவத்தில் இருந்து முதுகலை பயிலும் கல்லூரி வாழ்க்கையில் 100 க்கும் அதிகமான பேச்சுப்போட்டிகளில் பங்கேற்றுப் பரிசு பெற்றுள்ளார்.

காதிர் முகைதீன் கல்லூரியில் பயின்ற காலத்தில் அனைத்துக்கல்லூரி பேச்சுப்போட்டிகளில் பங்கேற்று பல முதல்ப்பரிசுக் கோப்பைகளைப் பெற்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்தது.

படிப்பை முடித்து காதிர் முகைதீன் கல்லூரியில் தமிழ்த்துறையில் பணியாற்ற தொடங்கிய காலம் முதற்கொண்டு ஓய்வு பெரும் காலம் வரை 36 ஆண்டுகள் பல நூறு மான்வகளைப் பேச்சாளர்களாகவும், கவிஞர்களாகவும், எழுத்தாளர்களாகவும் உருவாக்கி உள்ளார். இதே காலகட்டத்தில் பல வானொலி நிகழ்ச்சிகளிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று உள்ளார். இதில் விசுவின் அரட்டை அரங்கம் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று உலக அளவில் தொலைக்காட்சி நண்பர்களின் கவனத்தை ஈர்த்து உள்ளார்.

மாணவராகவும், பேராசிரியராகவும் பணியாற்றிய காலம் முதல் இப்பொழுது வரை சென்ற 50 ஆண்டுகளில் 4000 க்கும் அதிகமான இலக்கியம், ஆன்மிகம் மற்றும் சமுதாயம் சார்ந்த பல்வேறு மேடைகளில் பேசி இருக்கிறார்.

சொற்பொழிவுகாக இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவூதி அரேபியா, குவைத், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு பல முறை சென்று வந்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.