.

Pages

Monday, June 6, 2016

சிறந்த 'இரத்ததான சேவை' விருது பெற்ற கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் ( CBD ) !

அதிராம்பட்டினம், ஜூன் 06
அதிரை சுற்றுவட்டார பகுதியின் பல்வேறு துறைகளை சார்ந்த சாதனையாளர்கள் இனங்காணப்பட்டு அவர்களின் பணிகளை ஊக்கப்படுத்தும் விதமாக 'அதிரை நியூஸ் கல்வி - சாதனையாளர்கள் விருது 2016' வழங்கும் விழா நேற்று முன்தினம் அதிரை பேருந்து நிலையம் அருகே உள்ள சாரா திருமண மஹாலில் நடைபெற்றது.

விழாவில் சிறந்த இரத்ததான சேவை விருது கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் ( CBD  ) அமைப்பிற்கு வழங்கப்பட்டது. விருதினை காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் முனைவர் ஏ. உதுமான் முகையதீன் வழங்கி பாராட்டு தெரிவித்தார். கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் ( CBD ) அமைப்பின் தஞ்சை மாவட்ட செயலாளர் காலித் அஹமது, மாவட்ட நிர்வாகிகள் கலிபா, ராஜிக் அஹமது ஆகியோர் இணைந்து பெற்றனர்.

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ்' அமைப்பு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வருகிறது. இதன் உறுப்பினர்களாக கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர் பலர் உள்ளனர். இந்த அமைப்பின் மூலம் இரத்தம் தேவைப்படும் நோயாளிகளுக்கு சாதி மதம் இனம் பாகுபாடின்றி, நேரம் காலம் பார்க்காமல் நேரடியாக மருத்துவமனைக்கு சென்று வழங்கி வருகின்றனர். இந்த பணிக்காக எவ்வித கட்டணமும் நோயாளிகளிடமிருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பெறுவதில்லை. இந்த அமைப்பின் உறுப்பினர்கள் முகநூல், வாட்ஸ்அப் ஆகிய சமூக தளங்களில் தனிக்குழு அமைத்து இரத்தம் தேவைப்படும் நோயாளிகளுக்கு உடனடியாக உதவி வருகின்றனர்.  அவசர சிகிச்சைக்காக இரவு நேரத்தில் மருத்துவமனைக்கு சென்று இரத்த தானம் செய்துள்ளனர். மேலும் மருத்துவமனையில் தங்கிருந்து சிகிச்சை பெரும் நீண்ட கால நோயாளிகளுக்கு நேரில் சென்று இரத்த தானம் வழங்கி வருகின்றனர். இதுவரையில் 600க்கும் மேற்பட்ட யூனிட் இரத்த தானம் செய்துள்ளனர். மேலும் இரத்தம் தானம் - மரம் வளர்ப்பு - கருவேல மரங்கள் அழிப்பு ஆகியவற்றை வலியுறுத்தி பேரணிகள், வெள்ளத்தால் பாதிப்படைந்தவர்களுக்கு உதவுதல், சாலை விபத்து முதலுதவி ஆகிய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் எதிர்வரும் ஜூன் 18 ந்தேதி உத்திரபிரேதேசத்தில் இயங்கிவரும் ஹுயூமன் ஹெல்த் பவுண்டேஷன் மற்றும் பெடேரேஷன் இரத்த தான அமைப்பின் மூலம் சிறந்த சேவைக்கான விருதிணை பெற இருக்கிறது என்பதனை மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றோம்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.